search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது.
    • சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.

    இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான்.

    அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார். ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்று பொருள் சிறுவன் கையில் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் அவ்வாறு செய்யும் போது நான் அவனை திட்டினாலும் தற்போது அவனது கையில் வரலாற்று பழமைவாய்ந்த தங்க வளையல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    • ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.
    • சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன.

    ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இங்கிலாந்தின் டட்லி பகுதியில் அமைந்திருந்த போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கு வாடகை கட்டணமாக மாதம் 750 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.77 ஆயிரம்) நிர்ணயித்துள்ளனர். மேலும் சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில்,
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.

    2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில் 2022-ம் ஆண்டு 45774 ஆக உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ரிஷி சுனக் இதில் உறுதியாக இருந்தார்.

    பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததாலும், இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புதற்கும் இங்கிலாந்து அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. அதனால் கடந்த வருடம் இங்கிலாந்துக்கு வருபோரின் எண்ணிக்கை 29,437 என குறைந்தது.

    இந்த நிலையில் குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவேண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை, வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வரும் நபரை கட்டுப்படுத்தும் வகையிலான மசோதா தடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை பாராளுமன்றம் நடைபெறும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் (ஜூன்) சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவேண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அரசாங்கம் ஏற்கனவே நாடுகடத்தல் விமானங்களுக்கு வாடக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்களை பணியமர்த்தியுள்ளது. மேல்முறையீடுகளை கையாள நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

    • சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.
    • இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    செம்மறி ஆடுகள் கூட்டமாக இருக்கும் போது சண்டையிட்டு காயம் அடைவது அதனை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகவே திகழ்கிறது. இதனை தடுக்க இங்கிலாந்தில் செம்மறி ஆடுகள் மீது பாடிஸ்பிரே தெளித்து விசித்திரமான தீர்வை கண்டுபிடித்துள்ளதாக சில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் நார்போக்- சபோல்க் எல்லையில் உள்ள பண்ணை விவசாயிகள் இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், செம்மறி ஆடுகள் சண்டையை தடுக்க அவற்றின் மீது பாடிஸ்பிரே தெளித்தோம். இந்த சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    • சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல பறவைகளும் சைரன் ஒலி சத்தம் எழுப்பிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கார்கள் பழுதடைந்தது போன்று சப்தம் கேட்டது. உடனே போலீசார் அங்கு சென்ற போது சாலையில் எந்த வாகனங்களும் இல்லை. சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. அப்போது போலீசார் சுற்றிலும் பார்த்த போது அங்குள்ள மரத்தில் பறவைகள் சைரன் ஒலி சத்தம் எழுப்பியது தெரிய வந்தது.

    ஸ்டார்லிங் என்று அடையாளம் காணப்பட்ட பறவைகள் எந்திரங்களின் ஒலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற விஷயங்களை பின்பற்றுவது இதன் சிறப்பாக உள்ளது. இந்த ஒலி சத்தத்தால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.

    அதில் நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எதைப்பற்றியும் அதிகமாக சிந்தித்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது. பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எனக்கு என்று தனியாக எந்த சிறப்பு உணவு முறையும் இல்லை. ஆனாலும் சமச்சீர் உணவு, பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு உண்பது போன்றவை நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும் என்றார். மேலும் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது எனவும், மதுவை அரிதாகவே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இங்கிலாந்து லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன். இவரது மனைவி ஹோலி பிராம்லி (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். அதை சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளார்.

    ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்தனர். அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹீத்ரூ விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்டன.
    • இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹீத்ரு விமான நிலையம்.

    எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த விமான நிலையத்தின் 3-வது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை நேற்று இறக்கிவிட்டது.

    அப்போது அதே ரன்வேயில் வந்திறங்கிய மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதி லேசாக உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்தது.

    • இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார்.
    • இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார். இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக்.

    இதுதொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டி நடத்திவருகிறது.
    • வினாடி வினா போட்டியில் கொல்கத்தா பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றிருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்திவருகிறது. மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், இந்த வினாடி வினா போட்டியின் அரையிறுதிச் சுற்று கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்தக் குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம்பிடித்தார்.

    போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன்மூலம் அவரது குழு இறுதிச்சுற்றுக்கு தேர்வானது. லண்டனில் வரும் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    ×