search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரைகள்"

    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன.
    • ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை சாய்பாபாகாலனி, பாரதி பார்க் சாலையில் அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் அங்கு உள்ள ரோட்டில் மாணவிகளை அதிகம் பார்க்க முடியும்.

    சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன. அவை பாரதி பார்க் பகுதியில் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் குதிரைகள் நடுரோட்டில் வந்து நின்று மிரள வைக்கின்றன. இதனால் மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகளுக்கு பயந்து தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஏர்ஹாரன் அடிக்கும்போது குதிரைகள் மிரண்டு ஓடுகிறது. இதனால் எதிரே நடந்து வருபவர்கள் பதறி அடித்து நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    பாரதி பார்க் சாலையின் அருகில் ராமலிங்கம் காலனி வீதிகள் உள்ளன. அங்கு குதிரைகள் எந்நேரமும் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் சத்தமாக கனைத்து பொதுமக்களை பதற வைக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. இதனால் அங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

    அதுவும்தவிர இப்பகுதியில் மகளிர் விடுதிகள் அதிகம் உள்ளன. அங்கு தங்கியிருக்கும் பெண்களும் குதிரை கூட்டத்தை கண்டு அச்சப்பட்டு வெளியே வர முடியாமல் தவித்து நிற்கும் அவல நிலை உள்ளது. பாரதி பார்க் வீதியின் அனைத்து தெருக்களிலும் குதிரைகள் பவனி சென்று திரும்புகின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை ஒருவர் மதுபோதையில் அத்துமீறி குதிரை சவாரி செய்ய கிளம்பினார். அப்போது குதிரை கனைத்துக் கொண்டு சிலிர்த்தது. இதனால் அந்த குடிமகன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். அதனை கண்டு சாலையோரம் நின்றிருந்த அனைவரும் வேடிக்கையாக சிரித்தனர்.

    சாய்பாபாகாலனி பாரதி பார்க் வீதிகளில் குதிரைகளின் நடமாட்டத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை பிடித்து சென்று பட்டியில் அடைக்க வேண்டும். அந்த குதிரைகளின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
    • பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    பேரூர்

    சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டி பேரூர் பேரூராட்சி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.

    இந்த பகுதிகளில் சிறுவாணி மெயின் ரோடு பகுதிகளில், ஏராளமான குதிரைகள் குட்டிகளுடன் காலை, இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி தெரிகிறது.

    இதனால் காலை, மாலை வேலைக்கு சென்று திரும்பும் வாகன ஓட்டிகளும், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும், ஆறுமுகக் கவு ண்டனூர், பச்சாபாளையம், செட்டி பாளையம், காளம்பா–ளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் குதிரை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பின் தெருக்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஒன்றுக்கொன்று கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டு ஆவேசமாக ரோடுகளில் ஓட்டம் பிடிப்பதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக, பேரூரிலிருந்து சிறுவாணி மெயின் ரோட்டில் தெற்கே மாதம்பட்டி வரை, ஆங்காங்கே குதிரைகள் கூட்டம் கூட்டமாக ரோடுகளில் உலா வருகிறது.

    இதனால் பைக், கார், லாரி, பஸ்களில் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், காலையில் அலுவலகம் மற்றும் வேலைக்கு அவசரமாக செல்வோர் சிரமப்படுவதோடு, ரோடுகளில் குதிரைகள் கூட்டம், கூட்டமாக குறுக்கிலும், மறுக்கிலும் வேகமாக ஓடுவதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    மேலும், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு தெருக்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக ஆவேசமாக கணைத்தபடி ஓட்டம் பிடித்து ரோட்டில், குறுக்கும், மறுக்கிலும் ஓடி வருகிறது.

    யாரோ தனியார் மூலம், இந்த குதிரைகள் பொதுவெளியில் விடப்பட்டு வருகிறது. பேரூர் போலீசாரிடமும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால் எந்த நேரமும் அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

    இப்படிப்பட்ட சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இந்த கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுவதை வாடிக்கயைாக உள்ளது. சில நேரங்களில் நடந்து செல்லும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    எனவே கால்நடைகள் சாலைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டனர். அதன்பேரில் ஊட்டி நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் பலமுறை எச்சரித்தும் பல அபராதங்கள் விதித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

    இந்த நிலையில் ஊட்டி 21-வது வார்டு இரட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தெருக்களில் குதிரைகள் சாலையை வழி மறித்து சுற்றி கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.இதனால் அந்த வழியாக செல்ல பாதசாரிகள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் இடையூறாக அலைந்து கொண்டிருக்கும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×