search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "horses"

    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால் எந்த நேரமும் அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

    இப்படிப்பட்ட சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இந்த கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுவதை வாடிக்கயைாக உள்ளது. சில நேரங்களில் நடந்து செல்லும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    எனவே கால்நடைகள் சாலைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டனர். அதன்பேரில் ஊட்டி நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் பலமுறை எச்சரித்தும் பல அபராதங்கள் விதித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

    இந்த நிலையில் ஊட்டி 21-வது வார்டு இரட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தெருக்களில் குதிரைகள் சாலையை வழி மறித்து சுற்றி கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.இதனால் அந்த வழியாக செல்ல பாதசாரிகள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் இடையூறாக அலைந்து கொண்டிருக்கும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனியில் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குதிரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

    பழனி:

    தமிழகத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பாரம்பரியமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் ரிக்ஷா மற்றும் ஆட்டோக்கள் அதிகரிக்கவே இதன் பயன்பாடு குறைந்தது. தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இது போன்ற கால்நடைகள் போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்படுவது இல்லை.

    ஆனால் பழனியில் தொன்று தொட்டு குதிரை வண்டி சவாரி போக்குவரத்துக்கு இன்றளவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும், குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கும் குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களும் குதிரை வண்டிகளில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    ஆனால் குதிரை வண்டிகளை வைத்துள்ளவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் அதனை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர். குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.500 வருமானம் வந்தால்தான் குதிரைக்கு தீவனம் வாங்கி கொடுத்து வண்டியையும் பராமரித்து தனது செலவையும் பார்த்துக் கொள்ள முடியும்.

    ஆனால் கனரக வாகனங்கள் , ஆட்டோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குதிரை வண்டிகளின் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் பராமரிக்க முடியாமல் குதிரைகளை சாலையில் மேய விட்டு விடுகின்றனர்.

    அவை வாகனங்களில் செல்பவர்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வெறி நாய்கள் துரத்தி குதிரைகளை கடிப்பதால் அவைகளுக்கு நோய் ஏற்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க கூட குதிரை வளர்ப்போரால் முடிவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் குதிரைகளை பராமரிக்க கால்நடைத்துறை மூலம் உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×