search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdered case"

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
    • தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். திருமணம் நிச்சயமானதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #PollachiIssue
    பொள்ளாச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிர கதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பிரகதியை காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து கோவை காட்டூர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன பிரகதி நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆடைகள் கலைந்து இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நேற்று காலை பூசாரிபட்டிக்கு வந்து கல்லூரி மாணவியின் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), பாலமுருகன் (பேரூர்), இன்ஸ்பெக்டர்கள் வைரம், வெற்றிவேல்ராஜன், பாலமுரளிசுந்தரம் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. பரபரப்பு தகவல்களும் வெளியாயின. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவி பிரகதி காணாமல் போனதை தொடர்ந்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவி பிரகதியை ஒரு வாலிபர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் பிரகதியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, இந்த கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது. பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் (30) என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை போலீசார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவருக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்தார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். கோவை காட்டூர் போலீசார் மாணவி காணாமல் போனது குறித்து, முதலில் மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சதீஷ்குமாரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். சதீஷ்குமார் மனைவி, குழந்தையுடன் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, பிரகதி காணாமல் போனது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் அவரை போலீசார் சந்தேகப்படாமல் விட்டு விட்டனர். பின்னர்தான் அவர் பிரகதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, போலீஸ் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்து சதீஷ்குமார் நாடகமாடியது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் உடல் கிடந்த பகுதியான கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் சதீஷ்குமாரை தேடியபோது, அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி நேற்று அவரை கைது செய்தனர். மாணவியை அழைத்து செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கைதான சதீஷ்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நெல்லுக்குழிகாடு பகுதியை சேர்ந்தவன். என்னுடைய தந்தை தங்கராஜ். ரூ.40 லட்சம் கடன் இருந்ததால் என்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    எனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகினேன். கோவையில் கல்லூரியில் படித்து வந்த பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்தேன்.

    இதற்கிடையே மீண்டும் 10 பவுன் தங்க நகை வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாள். வேறு ஒருவருடன் பிரகதிக்கு திருமணம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆனாலும் என்னுடன் பழகுவேன் என்று பிரகதி கூறினாள். ஆனாலும் பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது என்று கருதினேன். வழக்கமாக பிரகதியை கோவையில் இருந்து பல்லடம் வரை அழைத்து சென்று விடுவேன்.

    கடந்த வெள்ளிக்கிழமை (5-ந் தேதி) காரில் பல்லடத்துக்கு அழைத்து செல்லாமல் கோமங்கலத்துக்கு அழைத்து சென்றேன். காரில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் நான் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த கத்தியால் பிரகதியின் நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு உடலை பூசாரிபட்டி பகுதியில் வீசி சென்றேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    பிரகதியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கைவிரல் அறுபட்டு இருந்ததும் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    கல்லூரி மாணவியை, உறவினரே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PollachiIssue
    நெல்லை கல்லூரி மாணவர் கொலையில் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவரது மகன் ராஜா (வயது19). நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய ராஜாவை ஒரு கும்பல் முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வழிமறித்தது.

    உயிர் பிழைக்க தப்பி ஓடிய ராஜாவை அவர்கள் ஓட ஓட விரட்டி கால்வாய் கரை அருகே வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் மறியல் போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மருதம் நகர் வழியாக சென்ற இறுதி ஊர்வலத்தின் போது ராஜா வீட்டில் ஒரு பூ மாலையை சிலர் வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜாவுக்கும் சிலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து பெரியவர்கள் இரண்டு தரப்பு இளைஞர்களையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் மாலை ராஜாவை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர் என்ற விபரம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேரை விடுவித்தனர். மற்ற 17 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் கூறிய தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த கூலிப்படையினருடன் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றுள்ளனரா? அல்லது கோர்ட்டில் இன்று சரண் அடைவார்களா? என்று தெரியவில்லை. இதனால் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று 3-வது நாளாக ராஜாவின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் அனைவரும் ஊரின் மையப் பகுதியில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலையான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அந்த பகுதிக்கு தனி ரே‌ஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் ஏற்படாததால், அவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு முன்னீர்பள்ளம், மருதம் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் பிடிபட்டனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் அந்தோணி, தாமஸ் செல்வம். இவர்களது உறவினரை கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்ததாக வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 2 பேரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஜராகாமல் தலை மறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பதுங்கி இருந்த சுரேஷ் அந்தோணி மற்றும் தாமஸ் செல்வன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலையில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
    சிவகிரி:

    சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.

    இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.

    இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.

    அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கல்லாவி அருகே கர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிரு‌ஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    கிரு‌ஷ்ணகிரி:

    கிரு‌ஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள கல்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பா‌ஷா என்கிற பாது‌ஷா(வயது 37). பேக்கரி தொழிலாளி. இவருக்கும் சிங்காரப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த அன்வர் மகள் ரஷீயா(26) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் பா‌ஷாவிற்கும், பெங்களூரு எம்.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த அவரது உறவினரான அசினா(24) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அசினாவை பெங்களூருவில் இருந்து தனது ஊரான கல்குண்டுக்கு அழைத்து வந்துள்ளார். இது தொடர்பாக பா‌ஷாவிற்கும், ரஷீயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பா‌ஷாவும், அசினாவும் தகாத உறவில் இருந்த போது, ரஷீயா நேரில் பார்த்து கூச்சலிட்டு, தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பா‌ஷா, அவருடைய தந்தை பஷீர்சாய்பு(72), தாய் அபினாபீ(65) மற்றும் அசினா ஆகியோர் சேர்ந்து ரஷீயாவை தாக்கியதுடன், மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

    அப்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரஷீயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை அன்வர் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து பா‌ஷா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கிரு‌ஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில், ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற்காக பா‌ஷா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அரியானா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Rampal
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.

    திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாரானார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.



    இவர் ஆன்மீகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

    ஹசார் கோர்ட்டில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஹிசார் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    சாமியார் ராம்பால் ஹிசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. #Rampal
    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவல்லிக்கேணி மந்திரவாதி கொலையில் கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருவதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.
    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லிக் கொண்டு இருந்தார். அவரது முன்பு ஆண்களும், பர்தா அணிந்த பெண்களும் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பெண் எழுந்து ஒரு வேதிப் பொருளை தூக்கி மந்திரவாதி மீது வீசினார். உடனே அவரது உடலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    தீக்காயம் அடைந்த மந்திரவாதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. மந்திரவாதி கொலை செய்யப்பட்டபோது அங்கு பர்தா அணிந்திருந்த 10 பெண்கள் இருந்தனர். அவர்களில் 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி விட்டனர். ஒரே ஒரு பெண் மட்டும் போலீஸ் விசாரணையில் சிக்காமல் இருந்தார்.

    அந்த பெண்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். அவரது பெயர் நவீன் தாஜ் (44). சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர். இவரது கணவர் சாதிக் பாஷா ராயப்பேட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார்.

    நவீன் தாஜை போலீசார் விசாரிக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று இரவு அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசினார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நவீன் தாஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    நவீன் தாஜ் அடிக்கடி மந்திரவாதியை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் உருது மொழியில் பேசி சண்டை போட்டுள்ளனர். அவர்கள் சண்டை போடுவதை மந்திரவாதியின் நண்பர் பழனிவேல் அடிக்கடி பார்த்துள்ளார். அவர்கள் உருது மொழியில் பேசியதால் எதற்காக சண்டை என்பதை பழனிவேலால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    நவீன் தாஜ் வேதிப்பொருளை வீசியபோது பழனிவேலும் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர்தான் நவீன் தாஜ் அடிக்கடி வந்து மந்திரவாதியிடம் சண்டை போட்டதாக அடையாளம் காட்டினார்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மந்திரவாதி கொலையில் கொலையாளி சிக்கியும் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. நவீன் தாஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.

    எனவே அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்தானா அல்லது மந்திரவாதியை கொன்றுவிட்டு அதில் இருந்து தப்புவதற்காக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்து முன்னணி பிரமுகர் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் அதிகாரிகள் ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுவை ஆலையில் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #HinduMunnani #Sasikumar
    கோவை:

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 38) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. யின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியை சேர்ந்த சதாம்உசேன்(27) ஆகியோருக்கு முக்கிய தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சதாம் உசேன் (27) கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபைர்(33) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் 15 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முபாரக்கை(37) கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக போத்தனூரை சேர்ந்த அபு தாகீர்(32) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போது கோவை கணபதியில் ஹக்கீம் என்ற பெயிண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக சசிகுமாரை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். கைதானவர்கள் தலைமறைவாக இருந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த வழக்கின் பின்னணயில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை உத்தரவின்பேரில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர். குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இவ்வழக்கில் கைதான முபாரக் உள்பட 4 பேரின் வீடுகளில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் இருந்து செல்போன்கள், பாக்கெட் டைரி, மெமரி கார்டுகள், ரசீதுகள், அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பாக குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மே மாதம் செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான், உக்கடத்தை சேர்ந்த அனீஷ், குனியமுத்தூரை சேர்ந்த ஹைதர் அலி, துடிய லூரை சேர்ந்த சதாம்உசேன், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், டைரி, சி.டி.க்கள், செல்போன்கள், ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முபாரக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்ததாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் இன்று சாய்பாபா காலனியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது வீட்டில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் துடியலூரில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்.

    என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுவை ஆலையில் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஷாஜகான் வீட்டில் நடந்து வரும் சோதனை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    ஷாஜகானின் வீட்டில் மத வழிபாடு வகுப்புகள் நடந்து வந்தது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் திரட்டுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதானவர்களுக்கு ஷாஜகான் உதவி செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #HinduMunnani #Sasikumar

    பழனியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    பழனி:

    பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்துமகன் செந்தில்குமார் (வயது 38). நேற்று அடிவாரம் பகுதியில் தனது நண்பர்களுடன் ஒரு பாரில் மது குடிக்க சென்ற போது தகராறு ஏற்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபாலன், அவரது அண்ணன் கோபிநாத் துர்க்கா, சவுந்தரபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக பூபாலனின் தம்பி பாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், செந்தில்குமாரின் தம்பி பாரதிமோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2013-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பழனி அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் உதயகுமார், பாலாஜி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில்தான் தற்போது செந்தில்குமாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்தில்குமார் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவரை வெளியூரில் சென்று வசிக்குமாறு அவரது தாய் சாவித்திரி கூறினார். அதன் பேரில் தனது மனைவி திவ்யா (வயது 34), மகன் கருப்பணபாரதி (4) ஆகியோருடன் திண்டுக்கல்லில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் அவனை தாயிடம் அழைத்து வந்துள்ளார்.

    அதன் பிறகு நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்க செல்லும் போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் இந்த கொலை நடந்துள்ளது. தற்போது பூபாலனின் தம்பியை தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    ×