search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் பிடிபட்டனர்
    X

    திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் பிடிபட்டனர்

    திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் பிடிபட்டனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் அந்தோணி, தாமஸ் செல்வம். இவர்களது உறவினரை கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்ததாக வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 2 பேரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஜராகாமல் தலை மறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பதுங்கி இருந்த சுரேஷ் அந்தோணி மற்றும் தாமஸ் செல்வன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×