என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varichiyur Selvam"

    • விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.

    விருதுநகர்:

    கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.

    இந்தநிலையில் அதே நாளில் வரிச்சியூர் செல்வம் மதுரையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களை அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை என்றும், கோவைக்கு சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்பாக அவர் ஆஜரானார்.

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில் குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விசாரணையில், செந்தில் குமார் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விருதுநகர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.

    இதன்பின்னர், ரவுடி வரிச்சியூர் செல்வம் அளித்த பேட்டியில், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான முதல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இன்று ஆஜரானேன். இதுவரை அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்து விட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன்.

    என்னை சுட்டு பிடிக்க போலீசார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் வீண் வதந்தி. காவல்துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. நான் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் கிடையாது. காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வழக்குகளை முடித்து விட்டால் நான் எனது பணிகளை தொடர்ந்து பார்ப்பேன் என்று கூறினார்.

    • இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
    • கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல் முழுவதும் நகைகள் அணிந்து நடமாடும் நகை கடை போல் வலம் வருவது இவரது வாடிக்கை. இதனால் இவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக உள்ளார்.

    இந்தநிலையில் வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்காக கோவை வந்து பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்வதற்கு முன் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்ய போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வரிச்சியூர் செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யுங்கள், அப்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றாலோ அல்லது அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ அவர்களை சுட்டுப்பிடியுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

    இதன் காரணமாக கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கோவை காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவை போலீசார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
    • தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×