search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister geethajeevan"

    • முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் உடன்இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4, 5-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராஜபுரம் மற்றும் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்ட துணை செயலாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்

    • பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கும்பாபிஷேக பணி

    இந்த கோவிலில் 2000-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அதற்கான பணிகளை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை தொடங்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில், அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது.
    • தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7-வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.

    மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மழைநீர் எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கு மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ்நகர் மற்றும் 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் ராமர், ஜான் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • உலக மீனவர் தின விழா தூத்துக்குடி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன் மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி, சிலம்பம் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    உலக மீனவர் தின விழா தூத்துக்குடி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் நலச்சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். ரீகன் வரவேற்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி, வாலிபால் போட்டி, சிலம்பம் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிவாரண உதவியாக ஒரு பெண்ணுக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மீனவர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் பொது அமைப்புகள் மூலம் சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்களுக்காக பணியாற்றுவதே பெருமை தான். அதே வேளையில் பொதுமக்களின் மகிழ்ச்சி தான் எனது மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விழா எடுக்க வேண்டும் என்றால், ஆண்டுதோறும் இணைந்து எல்லோரும் பணியாற்ற வேண்டும்.

    19 ஆயிரம் லிட்டர் டீசல்

    இயற்கையின் எதிர்ப்பு அலையோடும், சூரியன் நிலவு என சூழ்நிலைகள் மாறும் போது, நிலவின் வெளிச்சத்தில் பணி செய்கிறார்கள். சூரியன் உதித்த போது ஓய்வில் இருக்கிறார்கள். இயற்கையாகவே எதிர்ப்பு வாழ்க்கையாக கொண்டு தொழிலாளர்கள்படும் கஷ்டத்தை பலரின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

    திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிதி ஓதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திரேஸ்புரம் பகுதியில் தள்ளுவண்டி மூலம் குடிதண்ணீர் எடுத்து வந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் வசதியை நான் செய்து கொடுத்துள்ளேன். உங்களுக்கு முதல்-அசை்சர் கொடுத்த வாக்குறுதியின்படி மானிய விலையில் 18 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கியதை 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தியும், நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தி டீசல் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் வழியில்

    1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட சிங்காரவேலர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டாவை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். நமது மாவட்டத்திலும் 160 பேருக்கு விரைவில் வழங்கப்படும். சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கும் பட்டா வழங்கப்படும். கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். எனவே அனைவரும் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக திரேஸ்புரம் பங்கு தந்தை அமல்ராஜ், மீனவர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் இயற்கையோடும், செயற்கையோடும் வாழ்பவர்களை பாதுகாத்து தொழில் சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்று கூட்டுப்பிரார்த்தனை செய்தார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், பேராசிரியர் பாத்திமா பாபு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பா ளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, கவுன்சிலர்கள் பவானி மார்ஷல், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன், வட்டப்பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், முத்தரையர் நலச்சங்க தலைவர் சந்தனசெல்வம், மீனவர்கள் பரமசிவம், அண்ணாதுரை மற்றும் பெல்லா, பாஸ்கர், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.
    • விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

    தூத்துக்குடி:

    குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.

    அமைச்சர் கீதாஜீவன்

    பேரணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி மாநகாட்சி வளாகத்தில் நிறைவடைந்தது.பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுதேறும் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்புத்துறை மூலம் குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் உரிமைகளை காத்திடும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், குழந்தைகளின் உரிமையை காக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    குழந்தை திருமணம்

    மேலும், சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை ஆகியவை இணைந்து போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், இழப்பீடு தொகை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை திருமணம் செய்வோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர். மேலும், குழந்தை திருமணத்தை தடுக்க தொடர் நடவடிக்கைமே ற்கொள்ளப்பட்டு வருகிறது. அது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் தரமான முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் உமா, சிறப்பு சிறார் காவல் அலகு உறுப்பினர் வக்கீல் சொர்ணலதா, தி.மு.க. பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ரூ.11 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு சின்னமணிநகரில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநக ராட்சிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியான 33-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    பொதுமக்கள் கோரிககை

    அப்போது அப்பகுதி மக்கள் சின்னமணிநகரில் புதிய கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.11 லட்சம் வீதம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு சின்னமணிநகரில் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சி லர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், வட்ட அவைத்தலைவர் சுபாஷ், துணை செயலாளர் அருணா, வட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், பாஸ்கர், வார்டு நிர்வாகிகள் செந்தூர்பாண்டி நாடார், சவுந்தர்ராஜன், தமிழ், கண்ணன், பெருமாள், ஆரோக்கியராஜ், சேக்மியான், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.
    • அதன்படி, அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றை தடுப்பதில் போலீசாருக்கு உதவியாக இருப்பது சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள்.

    இந்த சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்ற சம்ப வங்கள், சமூக விரோதி களின் நடமாட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனவே, கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட கணேசன் காலனி 3-வது தெரு சந்திப்பு மற்றும் அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சரவணகுமார், வட்ட செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கீதாஜீவன் தொழிலாளர்களுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகள் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கினார்.
    • நீட் தேர்விற்கு எதிராக நீட் விலக்கு கோரி பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோ சனை கூட்டம் மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்ச ங்கம் தொ.மு.ச. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளருமான அன்பழகன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. தலைவர் முத்துராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொழிலாளர்களுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகள் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கி ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் தொழிலாளர்கள் நலன் அதிகளவில் பாது காக்கப்பட்டது. காரணம் தொழிலாளர்கள் நலனில் எப்போதுமே கலைஞர் காலம் முதல் இப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி தங்களது செயல்பாடுகளின் மூலம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றித் தரும் அரசாக இந்த அரசு இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், நீட் தேர்விற்கு எதிராக நீட் விலக்கு கோரி பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    விழாவில், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பழனி, துணை அமைப்பாளர்கள் ஜான்சன், சின்னதுரை, ஜாபர், மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், துணை அமைப்பாளர் பழனி பாலகணேஷ், தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்க அலுவலக செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் சுடலைமுத்து, சங்கர், அழகுபாண்டி, நல்லமுத்து, முருகபெருமாள், சாமிக்கண்ணு, இமாம் பிரேம் நஜிம், கருப்பசாமி, செந்தூர்பாண்டி, மணிகண்டன், விக்னேஷ், நவீன்குமார், ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி யுள்ளது.

    இந்நிலையில் 15, 16, மற்றும் 18-வது வார்க்குட்பட்ட பி அண் டி காலனி, 5 மற்றும் 13 ஆகிய தெருக்கள், புஷ்பாநகர், கதிர்வேல்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை பம்பிங் மூலமாக வெளியேற்றவும், சில இடங்களில் வடிகால்களில் இணைக்கவும் ஜே.சி.பி. மூலம் பணிகளை செய்திட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.

    மேற்கு பகுதி மண்டல உதவி ஆணையர் சேகர், மாநகர தி.மு.க. செய லாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான் என்ற சீனிவாசன், வட்ட செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்பெரு மாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவில் புதிய கால்வாய் வசதி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வரு கிறார்.

    10-வது வார்டு

    அதன்படி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்ட போது கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவில் புதிய கால்வாய் வசதி, அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அடிப்படை பணிகள்

    பின்னர் பொதுமக்க ளிடம் அமைச்சர் கூறு கையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரி களிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர தி.மு.க. அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மற்றும் கருணா, மணி, சந்தனமாரி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமுதமலர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜோன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.

    அப்போது புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி, புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×