என் மலர்

    நீங்கள் தேடியது "Minister geethajeevan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
    • அதை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் குடியிருக்கும் பொதுமக்களிடம் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.அதை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண் சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, சந்தனமாரி, ம.தி.மு.க. சார்பில் மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாநில தொண்டரணி செயலாளர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவண பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்களின் குறைகளை தீர்க்க வேண்டும். கட்ட பொம்மன் நகர் நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுரம் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை அமைச்சரின் உதவியாளர் கல்யாண சுந்தரம் குறிப்பெ டுத்துக்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18-வது ஆண்டு விழா போல் பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • தேர்வில் 6 லட்சம் பேர் கலந்து கொண்டால் அதில் 180 பேர் மட்டுமே தேர்ச்சியடைகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18-வது ஆண்டு விழா போல் பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சப்- கலெக்டர் தாக்ரே சுபம் நியான்டாரோ தலைமை தாங்கி மாணவ -மாணவி களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

    2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் இது போன்ற விழா நடைபெறவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஓருவகையில் தனித்திறமை உண்டு அதை அடைவதற்கும் இலக்கை நோக்கி நிர்ணயம் செய்து வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்றவற்றில் தேசிய அளவில் நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு படிக்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் 6லட்சம் பேர் கலந்து கொண்டால் அதில் 180 பேர் தேர்ச்சியடைகிறார்கள். பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுரைகளை கேட்டு நல்ல முறையில் படித்து தங்களது திறமையின் மூலம் இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். பிள்ளைகளை தரம் பிரித்து பெற்றோர்கள் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினார். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவுத்திறன் வளர்க்கும் வகையில் பேச்சு போட்டிகளும் நடைபெற்றன.

    விழாவில் சுதன்கீலர், சுதாசுதன், மகிழ்ஜான், கீர்த்தனா மகிழ், ராக்கேஷ், ஜீனா ஜீவன், உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி. ஆன பிறகு பல பணிகள் நடைபெற்றுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.

    மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநக ராட்சி மண்டல தலைவ ருமான வக்கீல் பாலகுருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், மாநகர துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    குருஸ்பர்னாந்துக்கு அரசு விழா மற்றும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசியது குறிப்பில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவித்தது. மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது.

    எம்.பி. தேர்தலின் போது கனிமொழியும் வாக்குறுதி கொடுத்தார். அதன் அடிப்படையில் மணி மண்ட பம் கட்டப்படும் அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி அவர்களது வாரிசு மற்றும் சமுதாய மக்கள் ஆதரவுபடி எம்.ஜி.ஆர். பூங்காவின் ஓருபகுதியில் அமைக்கப்படுகிறது. இதை கூட மறந்து அ.தி.மு.க.வினர் ஏதேதோ பேசுகிறார்கள்

    தன்னை முதல்-அமைச்சராக்கிய சசிகலாவையே யாரென்று தெரியாது என்று கூறிய எடப்பாடிக்கு மக்களைப்பற்றி சிந்திக்கும் எண்ணம் கிடையாது.

    10 வருட அ.தி.மு.க. ஆட்சியில் ரூரல் பகுதிகளில் எந்த பணியும் நடைபெற வில்லை. கனிமொழி எம்.பி. ஆன பிறகு பல பணிகள் நடைபெற்றுள்ளன. கோவை, மைசூர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தூத்துக்குடி வளர்ச்சிக்கு பர்னிச்சர் பார்க் மற்றும் இரண்டு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூரி உதவித்தொகையாக புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    கல்விக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு துணையாக இருப்ப வர்களுக்கு மட்டும் பல உதவிகளை செய்து தமிழ கத்தை புறக்கணிக் கின்றன. தமிழகத்தில் நடை பெறுகின்ற நல்லாட்சிக்கு முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வெங்கடபதி, மாநில பேச்சாளர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் உள்பட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செய லாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, ஜான் அலெக் சாண்டர், ராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராம கிருஷ்ணன், மேக நாதன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.
    • தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் சரவண குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் பிறந்த 15குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் வழங்கினார்.

    இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, அணி நிர்வாகிகள் ஆனந்த்கேப்ரியேல்ராஜ், ரமேஷ், சேசையா, ரவி, அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராம கிருஷ்ணன், கவுன்சி லர்கள் வைதேகி, இசக்கி ராஜா, விஜயலட்சுமி, சரவண குமார், பவானி மார்ஷெல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சிதம்பர நகரில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செய லாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கொள்கை, சுய மரியாதை கொண்டு தி.மு.க. பகுத்தறிவை வளர்த்தது. பெரியார், அண்ணா, கலைஞர் என 50 ஆண்டு நட்பு கருத்துகளை பரிமாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழன் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாடுபட்டவர். இது போன்ற வரலாறுகளை எல்லாம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் தனது கட்சிக்கு கொள்கை என்ன என்றே தெரியாமல் பேசி வருகின்றனர்.

    தனியாருக்கு விற்பனை

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்லத் தயாரா? வேலை வாய்ப்பு இல்லை, உரிமைகள் பறிப்பு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை, இது தான் உங்கள் சாதனை.

    மதம், ஜாதி போன்ற வற்றை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அது நடக்காது.

    தி.மு.க. ஆட்சியில் கல்வி, வேலை வாய்ப்பு, மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு ரூ.500 உயர்வு தொகை, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 பாராளுமன்ற தொகுதி களிலும் வெற்றி பெறு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர்கள் ராஜ சேகர், இருதயராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்டஅவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக் குழு உறுப்பி னர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, பிரதீப், ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சின்னத்துரை, ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
    • தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-

    அதிக அளவில் இளைஞர்கள், மகளிர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து மறைந்த போராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு நாள் வருகிற 19-ந்தேதி வருகிறது. அன்றைய தினத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாட வேண்டும் என்ற தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி பேரூர் மற்றும் வார்டு கிளைக்கழகங்கள் தோறும் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தொழில் வளம் பெருகுவதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் என மொத்தம் 728 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதிநெருக்கடி, மறுபுறம் ஒன்றிய அரசின் நெருக்கடி இவற்றை யெல்லாம் தாங்கி கொண்டு பொருளாதார நிலை உயர்வதற்கும் தொழில் வளம் பெருகு வதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    தமிழர்களின் வாழ்வாதாரமும், கலாசாரமும் பாதுகாக்கப்பட்டு உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன்,

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.
    • இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    மாவட்ட அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு காலை- மதியம் உணவு வழங்கப்படுகிறது. தி.மு.க. கொடியேந்தி இளைஞர் அணியினர் தைரியமாக மக்கள் பணியாற்ற வேண்டும். தி.முக.வில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஓவ்வொரு பகுதிகளிலும் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டங்களை கண்காணித்து அதை தகவலாக தெரிவித்து அதற்கு தகுந்தாற்போல் நாமும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை. தமிழ் மொழி அழிப்பு என்பது ஓரு இனத்தையே அழிப்பதற்கு சமம், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

    ஜாதி, மதத்தால் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் எதிர்கட்சி களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவரவர் மத வழிபாடுகளை அவரவர் மேற்கொ ள்ளட்டும். இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    25 மரக்கன்றுகள்

    விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பல பிரிவுகளாக பிரித்து கபடி போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு கிளைச்செயலாளரிடம் 25 மரக்கன்றுகன் கொடு க்கப்பட்டு எல்லோருடைய வீட்டிலும் மரம் வளர்க்க வழிவகை செய்யப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    அடுத்து அமையவுள்ள ஆட்சியில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வரும். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு விளாத்திகுளம் தொகுதி முழுமையாக ஓத்துழைப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தீர்மானம்

    கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது, இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகமாக விரைந்து சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர துணைச் செயலளார் பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், முருகேசன், ராதா கிருஷ்ணன், சின்ன மாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், கருப்பசாமி, டேவிட்ராஜ், மகேந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்துராமன், செல்வின், சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த கபரியேல்ராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் போல்டன்புரத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கப்ரேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். தமிழில் கல்வி படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்கள் உட்பட பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    கல்வி தரம் உயருவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுத் தான் கல்விக்கட்டணம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்-அமைச்சரின் பணிகள் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன.

    திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கொண்டதாகும். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தி.மு.க. மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பலனாக சட்டமன்ற தேர்தலின்போது நல்ல மாற்றம் கிடைத்தது.

    20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். மற்ற மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதிப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் பெருமாள், மாநகர விவசாய அணி அமைப்பாளர் தேவதாஸ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், செல்வின், கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, விஜயலெட்சுமி, கண்ணன், ஜெயசீலி, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், கங்காராஜேஷ், மூக்கையா, சுரேஷ், வட்ட பிரதிநிதிகள் ரஜினி முருகன், பாஸ்கர் மற்றும் மணி, மகேஸ்வரன்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான செல்வராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin