என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Glow"

    மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டினின் சிறந்த மூலம்.

    பலரும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போம். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெரிதாக தெரியாது. சரும பளபளப்புக்கு எப்போதும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுப்பது நல்லப் பலனை தரும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பழங்கள் குறித்து காணலாம். 

    வாழைப்பழம்

    வாழைப்பழங்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து புத்துயிர் பெறச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டியே வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன.

    பப்பாளி

    சருமத்தில் நன்மை பயக்கும் முக்கியப் பழம் பப்பாளி என பலரும் அறிவர். பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி, முகத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்ற உதவுகிறது. இது முகத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சருமத்தை சேதமடையாமல் பாதுகாத்து ஊட்டமளிக்கின்றன.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு வழிவகுக்கிறது.

    ஆரஞ்சு

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பளபளப்பான சருமத்திற்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முக சுருக்கத்தை குறைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.

    ஆப்பிள்

    ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கும். சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நச்சு நீக்கியாக செயல்படுவதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

    அன்னாசிப் பழம்

    அன்னாசிப் பழத்தில் சுத்திகரிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ப்ரோமெலைன் நொதி உள்ளது. ப்ரோமெலைன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 


    சரும பளபளப்புக்கு வைட்டமின் சி & ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுங்கள்

    மாதுளை

    அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டது மாதுளை. இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளையில் பியூனிசிக் அமிலமும் உள்ளது. இது ஒமேகா-5 கொழுப்பு அமிலமாகும். இது சருமத்தின் ஈரப்பத இழப்பைத் தடுக்கிறது. மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது மென்மையான, மிருதுவான சருமத்திற்கு வழிவகுக்கும்.

    கிவி

    மற்ற பழங்களை விட கிவியில் அதிக வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி உள்ளடக்கம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கிவியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன.

    மாம்பழம்

    மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் பிரகாசமாக்கவும் உதவுகிறது. மாம்பழத்தில் AHA கள் (ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது.

    வெள்ளரிக்காய்

    அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் குளிர்ச்சியான பண்புகளையும் கொண்டுள்ளன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது. இது திசுக்களை வலுப்படுத்தவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    • குங்குமப்பூ அழகு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
    • புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும்.

    குங்குமப்பூ என்றாலே நமது நினைவுக்கு வருவது, கர்ப்பிணிகள் அதனை பாலில் கலந்து குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பதுதான். ஆனால் குங்குமப்பூ பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். குங்குமப்பூ, அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என கேள்விப்பட்டிருப்போம். அப்படி பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை காண்போம்.

    வயதான தோற்றத்தை தவிர்க்கும்

    குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (குரோசின் மற்றும் சஃப்ரானல்) நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் உருவாக வழிவகுக்கும். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்கின்றன.

    பிரகாசமான முகம்...

    குங்குமப்பூவில் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உள்ளது. இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது டைரோசினேஸ் நொதியை அடக்கி, மெலனின் உருவாவதைக் குறைக்கும் ஆற்றல்மிகு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மெலனின் உற்பத்தியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் விளைவாக முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கிறது.

    நிறமிகளுக்கு சிகிச்சையளிக்கும்

    காயம் அல்லது அழற்சிக்கு பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்களை நீக்க குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. தோல்நோயை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சுற்றுச்சூழல் அழுத்தத்தால் ஏற்படும் நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது.


    சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்க குங்குமப்பூ உதவுகிறது

    ஈரப்பதம்

    குங்குமப்பூ ஒரு இயற்கையான மாய்ச்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் சரும வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கின்றன. 

    சரும அமைப்பை மேம்படுத்தும்

    குங்குமப்பூவில் வைட்டமின் பி (ரைபோஃப்ளேவின்) உள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சரும செல் புத்துயிர் பெறவும் உதவுகிறது. இதனால் புதிய செல்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைந்து, பழைய, சேதமடைந்த செல்கள் உதிர்ந்து, சருமம் பெரும்பாலும் மென்மையாகவும், பொலிவுடனும் தோன்றும். மேலும் சருமத்தின் மந்தமான தன்மை, கரடுமுரடான தன்மையைக் குறைத்து, சருமத்தை மென்மையாக காட்டு். 

    கருவளையத்தை நீக்கும்

    கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது . குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

    தோல் அழற்சி

    குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா (அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமம்) போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. 

    சூரிய ஒளி பாதுகாப்பு

    குங்குமப்பூ சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது. 

    • கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
    • தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

    கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம். 

    உடல் எடை குறையும்

    உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும். 

    சரும பொலிவு

    தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட்  வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. 

    சரும பாதுகாப்பு

    சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும். 


    உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்

    பாடி லோஷன்

    உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். 

    முடி பராமரிப்பு

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது.  தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது. 

    தோல் நோய்

    கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது. 

    • சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பப்பாளி.
    • சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம்.

    பப்பாளி சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?.  பப்பாளியால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? அது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

    முகப்பரு கட்டுப்பாடு

    பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இறந்த செல்கள் அகற்றப்படுவதால் முகத்தில் பருக்களின் அளவு குறையும். 

    முகச்சுருக்கம்

    பப்பாளியில் 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட் அதிகளவு உள்ளது. இது தோல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.  2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி , பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும். 

    சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்

    பப்பாளியில் பயனுள்ள நொதிகள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த மற்றும் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் மாசுக்களை அகற்ற உதவும். பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. 

    தோல் நோய்கள்

    பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி நொதிகள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.

    ஈரப்பதம்

    பப்பாளியில் அதிக அளவு உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் வறண்ட, தோல் உரியும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன. பப்பாளி கூழை உங்கள் சருமத்தில் தொடர்ந்து தடவுவது சருமத்தை மென்மையாக்கி அதன் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவும்.

    அடிமுதல் நுனிவரை

    பப்பாளி பழம் மட்டுமின்றி பப்பாளிச் செடியின் பல பாகங்களும் சருமத்திற்கு நன்மை பயக்கும். சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம். பப்பாளியின் நன்மைகளை வெவ்வேறு வடிவங்களில் எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.


    பழம், சாறு, இலை என அனைத்து வடிவங்களிலும் சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கிறது பப்பாளி

    பழம்...

    பப்பாளியை பச்சையாகவோ, பழுத்ததாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சாப்பிடுவதைத் தவிர, மசித்த பப்பாளி கூழை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். மசித்த பப்பாளி கூழில் தேன், மஞ்சள், எலுமிச்சை சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப) சேர்க்கலாம். பழுப்பு நிறத்தை நீக்க, சருமத்தை ஒளிரச் செய்ய,  ஈரப்பதத்தை தக்கவைக்க அல்லது ஊட்டமளிக்க இதைப் பயன்படுத்துங்கள்.

    விதைகள்

    பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. பப்பாளி விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உங்கள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும். 

    இலைகள்

    பொதுவாக மென்மையான, தெளிவான மற்றும் இளமையான சருமத்திற்கு பப்பாளி இலைகள் சாறு வடிவத்திலும், பேஸ்ட் வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலைகளில் புரதத்தை கரைக்கும் நொதியான பப்பெய்னும் உள்ளது. எனவே, அதன் இலையை அறைத்து அந்த சாற்றை இறந்த சரும செல்களை அகற்றவும், அடைபட்ட துளைகளை அழிக்கவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    சோப்பு

    பப்பாளியின் நன்மைகளைப் பெற இதுவே எளிதான வழி. பழச்சாறு, வைட்டமின் சி & ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆர்கானிக் பப்பாளி சோப்பு உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும், ஒழுங்கற்ற நிறமிகளைக் குறைக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.

    சாறு

    பப்பாளி ஜூஸ் உடனடி நீரேற்றம் மற்றும் பளபளப்பை வழங்கும். சாற்றில் பொட்டாசியம் இருப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் மந்தமான தன்மையை நீக்குகிறது.

    • முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
    • ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.

    முகப்பரு

    ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன. 

    திறந்த துளைகள்

    மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.

    பளபளப்பான சருமம்

    ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது. 

    வீக்கம்

    அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது. 

    ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது. 


    ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்

    வறண்ட சருமம்

    வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும். 

    சருமத்துளைகள்

    ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம். 

    அரிப்பு 

    மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும். 

    • சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு.
    • சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமல் காக்கும்.

    இயற்கையான முறையிலேயே சருமத்திற்கு பளபளப்பை கூட்டுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அத்தகைய பழங்கள் பற்றி பார்ப்போம்.

    தர்பூசணி

    சருமத்திற்கு ஈரப்பதத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. குறிப்பாக எண்ணெய் பசையுள்ள சருமம், முகப்பரு சருமம் கொண்டவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சருமம் பளபளப்புடன் மின்னத் தொடங்கிவிடும்.

    ஆரஞ்சு

    சருமத்திற்கு மாயாஜால அழகை கொடுக்கும் பழம், ஆரஞ்சு. அதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சூரிய கதிர்களிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சரும அரிப்பு, வியர்வை உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகாமலும் காக்கும்.

    அவகேடோ

    இந்த பழத்தில் வைட்டமின்கள் இ, ஏ, சி, கே, பி6, நியாசின், பாந்தோதெனிக் அமிலம், போலட், நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் உள்புற வளர்ச்சிக்கு வித்திட்டு சரும அழகை மெருகேற்ற வழிவகை செய்யக்கூடியவை.

    எலுமிச்சை

    எலுமிச்சை சருமத்திற்கு பளபளப்பு சேர்க்குமா? என்ற எண்ணம் எழலாம். ஆனால் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ள அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவிடும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படக்கூடியது.

    • மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது.
    • உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

    கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால்

    மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.

    பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பது எப்படி என்று தெரியாமல் பலர் சருமத்தை பளபளக்க வைக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ் மாஸ்க், கிரீம், ஸ்க்ரப், ஃபேஸ் வாஷ் போன்றவை. பளபளப்பான சருமத்தைப் பெற பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள், அவர்களில் சிலர் மட்டுமே தெளிவாக சரியான தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று அறியாதவர்களாக உள்ளனர். அவர்ளுக்கான பயனுள்ள பதிவுதான் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...

    Facewash மூலம் முகத்தை கழுவவும்

    முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது. அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.



    Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்

    தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.

    TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது

    சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.

    முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...

    மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.

    சன்ஸ்கிரீன் அவசியம்

    கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமே அவசியம் என்று சிலர் நம்பினாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தேவையானது தான். ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.

    நைட் கிரீம் பயன்படுத்துதல்

    நைட் க்ரீம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. மேக்கப்பை நீக்கிவிட்டு, இரவில் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு போகும், எனவே நைட் க்ரீமைப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.

    நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற நைட் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் அதைத் தடவுவது முக்கியம்.



    தண்ணீர் குடிக்கவும்

    உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நமது சருமத்தின் தோற்றம் மேம்படும். தண்ணீர் குடிப்பது உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும், இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    • செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது.
    • ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.

    தினசரி சருமமானது, வெளியுலக மாசுவை எதிர்கொள்கிறது. இது பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பூச்சு பராமரிப்புகள் சருமத்தை குறிப்பிட்ட அளவு குணப்படுத்தும் என்றாலும் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையானது வீக்கத்தை உண்டு செய்யும். அது சருமத்தில் பிரதிபலிக்கலாம். உடலுக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் அது ஆரோக்கியமான சருமத்துக்கும் கூந்தலுக்கும் உதவும். அந்த வகையில் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நான்கு விதமான தேநீர் உதவும்.

    செம்பருத்தி தேநீர்

    செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது. குறிப்பாக கூந்தல் அழகுக்கு இது மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பராமரிப்பு போன்று இது சருமத்துக்கும் நச்சு நீக்கும் மூலிகையாகவும் செயல்படுகிறது. நீரேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது தோல் வறட்சி, அரிப்பு பிரச்சினைகளை குறைக்கிறது. இதில் உள்ள கொலாஜன் தோலும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    டேண்டேலியன் தேநீர்

    டேண்டேலியன் தேநீரை அற்புதமான மூலிகை என்று சொல்லலாம். இந்த மூலிகை தேநீரில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் நச்சுத் பொருட்களை வெளியேற்றுகிறது. இது சில வகையான செல் சேதத்தை தடுக்க உதவும். மேலும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல் சேதத்தை தவிர்க்கவும் துணை புரியும்.

     

    ரோஜா தேநீர்

    ரோஜா வாசனை மிக்க பூ. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப்பராமரிப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. சரும பராமரிப்பில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும். இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.

    மல்லிகை பூ தேநீர்

    மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடுகளை குறைக்கவும் செய்கிறது. இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகிவருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும்.

    • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையானபொருட்கள்:

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,

    தண்ணீர் 1 கப் – 150 மி.லி,

    நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.

    செய்முறை:

    பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    மற்றொருமுறை:

    ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

    பலன்கள்

    * மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.

    சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

    செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

    * தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

    * பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.

    * கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    ×