என் மலர்
நீங்கள் தேடியது "Saffron Benefits"
- குங்குமப்பூ அழகு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
- புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும்.
குங்குமப்பூ என்றாலே நமது நினைவுக்கு வருவது, கர்ப்பிணிகள் அதனை பாலில் கலந்து குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பதுதான். ஆனால் குங்குமப்பூ பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். குங்குமப்பூ, அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என கேள்விப்பட்டிருப்போம். அப்படி பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை காண்போம்.
வயதான தோற்றத்தை தவிர்க்கும்
குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (குரோசின் மற்றும் சஃப்ரானல்) நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் உருவாக வழிவகுக்கும். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்கின்றன.
பிரகாசமான முகம்...
குங்குமப்பூவில் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உள்ளது. இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது டைரோசினேஸ் நொதியை அடக்கி, மெலனின் உருவாவதைக் குறைக்கும் ஆற்றல்மிகு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மெலனின் உற்பத்தியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் விளைவாக முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கிறது.
நிறமிகளுக்கு சிகிச்சையளிக்கும்
காயம் அல்லது அழற்சிக்கு பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்களை நீக்க குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. தோல்நோயை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சுற்றுச்சூழல் அழுத்தத்தால் ஏற்படும் நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது.

சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்க குங்குமப்பூ உதவுகிறது
ஈரப்பதம்
குங்குமப்பூ ஒரு இயற்கையான மாய்ச்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் சரும வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கின்றன.
சரும அமைப்பை மேம்படுத்தும்
குங்குமப்பூவில் வைட்டமின் பி (ரைபோஃப்ளேவின்) உள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சரும செல் புத்துயிர் பெறவும் உதவுகிறது. இதனால் புதிய செல்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைந்து, பழைய, சேதமடைந்த செல்கள் உதிர்ந்து, சருமம் பெரும்பாலும் மென்மையாகவும், பொலிவுடனும் தோன்றும். மேலும் சருமத்தின் மந்தமான தன்மை, கரடுமுரடான தன்மையைக் குறைத்து, சருமத்தை மென்மையாக காட்டு்.
கருவளையத்தை நீக்கும்
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது . குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
தோல் அழற்சி
குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா (அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமம்) போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
சூரிய ஒளி பாதுகாப்பு
குங்குமப்பூ சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது.
- நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ.
- உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும்.
குழந்தை அழகாக, சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிற குங்குமப்பூவுக்கு வேறு சில பலன்களும் உள்ளன.

மிக முக்கியமாக நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ. வலிப்புநோய் மாதிரியான தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள், வெற்றிலையோடு சிறிது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மாத்திரைகளையும் வெற்றிலையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.
நுண்ணூட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும். வளர்சிதை மாற்ற இயக்கத்தைச் சீராக வைக்கும். சுவாசப்பாதை கோளாறுகள் உள்ளவர்கள், வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலையோடு குங்குமப்பூவும் மிளகும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். நீர்க்கோவை மாத்திரை போல குங்குமப்பூவை அரைத்து பற்றுப்போட தலைவலி குணமாகும்.
சிலர் எப்போதும் அதீத சிந்தனையில் இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. ஸ்ட்ரெஸ்சும் இருக்கும். எந்த காரணத்துக்காக தூக்கம் இல்லாவிட்டாலும் குங்குமப்பூ உதவும் என அர்த்தமில்லை. நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் தூக்கமின்றி தவிப்போருக்கு, குங்குமப்பூ நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் தரும்.

சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மை யாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம்.
குங்குமப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் அந்த தைலத்தை வெளிப்பூச்சாக பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள் வருகின்றன. தேங்காய்ப்பூவை சாயமேற்றி குங்குமப்பூ என்ற பெயரில் விற்கிறார்கள். தரமான குங்குமப்பூவை, அளவோடு உபயோகிக்கும்போது அது அருமருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.






