என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குங்குமப்பூ"

    • குங்குமப்பூ அழகு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
    • புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும்.

    குங்குமப்பூ என்றாலே நமது நினைவுக்கு வருவது, கர்ப்பிணிகள் அதனை பாலில் கலந்து குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பதுதான். ஆனால் குங்குமப்பூ பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். குங்குமப்பூ, அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என கேள்விப்பட்டிருப்போம். அப்படி பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை காண்போம்.

    வயதான தோற்றத்தை தவிர்க்கும்

    குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (குரோசின் மற்றும் சஃப்ரானல்) நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் உருவாக வழிவகுக்கும். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்கின்றன.

    பிரகாசமான முகம்...

    குங்குமப்பூவில் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உள்ளது. இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது டைரோசினேஸ் நொதியை அடக்கி, மெலனின் உருவாவதைக் குறைக்கும் ஆற்றல்மிகு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மெலனின் உற்பத்தியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் விளைவாக முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கிறது.

    நிறமிகளுக்கு சிகிச்சையளிக்கும்

    காயம் அல்லது அழற்சிக்கு பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்களை நீக்க குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. தோல்நோயை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சுற்றுச்சூழல் அழுத்தத்தால் ஏற்படும் நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது.


    சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்க குங்குமப்பூ உதவுகிறது

    ஈரப்பதம்

    குங்குமப்பூ ஒரு இயற்கையான மாய்ச்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் சரும வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கின்றன. 

    சரும அமைப்பை மேம்படுத்தும்

    குங்குமப்பூவில் வைட்டமின் பி (ரைபோஃப்ளேவின்) உள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சரும செல் புத்துயிர் பெறவும் உதவுகிறது. இதனால் புதிய செல்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைந்து, பழைய, சேதமடைந்த செல்கள் உதிர்ந்து, சருமம் பெரும்பாலும் மென்மையாகவும், பொலிவுடனும் தோன்றும். மேலும் சருமத்தின் மந்தமான தன்மை, கரடுமுரடான தன்மையைக் குறைத்து, சருமத்தை மென்மையாக காட்டு். 

    கருவளையத்தை நீக்கும்

    கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது . குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

    தோல் அழற்சி

    குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா (அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமம்) போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. 

    சூரிய ஒளி பாதுகாப்பு

    குங்குமப்பூ சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது. 

    • குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது.
    • குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

    'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.

    நமக்கு தெரிந்த இந்த குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு-சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரை கடல் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

    குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு குங்குமப்பூவை ஏன் தருகிறார்கள் தெரியுமா?

    குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.

    ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

    இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இப்படி பல காரணங்களுக்காகவே, கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

    குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

    குங்குமப்பூ உபயோகப்படுத்தும் முறை:

    குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம்.

    குங்குமப்பூவை பொடி செய்யும் முறை:

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    • நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது.
    • குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் மலைப்பகுதியாகவும், குளிர் சீதோஷ்ண நிலை காணப்படும் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி என குளிர் பிரதேஷங்களில் மட்டும் விளையும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காஷ்மீரில் மட்டும் விளையும் குங்குமப்பூ கேரள அரசு நிறுவனமான, கிருஷி விகாஸ் கேந்திரா சார்பில், காந்தலூர் பெருமலையை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி நிலத்தில் பரிசோதனை முறையில் நடவு செய்யப்பட்டது.

    காஷ்மீர், பாம்போரா கிராமத்தில் இருந்து குங்குமப்பூ கிழங்கு கொண்டு வரப்பட்டு இயற்கை உரங்கள் இட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது, காஷ்மீரில் விளைவது போலவே நன்கு வளர்ந்து, அதே நிறம், குணம் ஆகியவற்றுடன் முதல் முறையாக குங்குமப்பூ அறுவடை செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விஞ்ஞானிகள் சுதாகர், சவுந்தரராஜ், மாரியப்பன், வெங்கட்சுப்ரமணியம் குழுவினர், சாகுபடி முதல் அறுவடை வரை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை சாகுபடி காலமாக கொண்டு இரு ஆண்டுகளாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் கிழங்கு நடவு செய்தால் 2.5 லட்சம் பூக்கள் பூக்கின்றன.

    ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 மாதங்களில் சராசரியாக ரூ.4.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. சாகுபடி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அவை வளர்வதற்கு மழை குறைவாகவும், குளிர் சீதோஷ்ண நிலை நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுக்கு இது குறித்த அறிக்கை அளித்து இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்றனர்.

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.
    • சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

    மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    குங்குமப்பூவை பால் (அ) தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.

    குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.

    கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர மாற்றம் தெரியும். தேங்காய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் குறையும்.

    குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

    குங்குமப்பூ சிலருக்கு சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

    • சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
    • குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    தோல் பராமரிப்புக்கு வரும்போது, இயற்கை மற்றும் பாரம்பரிய வைத்தியம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. குங்குமடி தைலம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட அத்தகைய ஒரு தீர்வு. அதன் சக்தி வாய்ந்த மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற குங்குமடி தைலம் ஒரு பிரபலமான ஆயுர்வேத எண்ணெய் கலவையாகும், இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில், குங்குமடி தைலம் என்றால் என்ன, அதன் பொருட்கள் மற்றும் பண்புகள், அது வழங்கும் நன்மைகள், அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வோம். தோல் பராமரிப்பு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான குங்குமடி தைலம் பலன்களைப் பற்றி ஆராய்வோம்.

    குங்குமடி தைலம் என்றால் என்ன?

    குங்குமடி தைலம், குங்குமடி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, இது பல்வேறு தாவரவியல் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகை எண்ணெய் கலவையாகும். இது பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்தும் திறனுக்காகப் புகழ்பெற்றது. முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து கதிரியக்க நிறத்தை ஊக்குவித்தல் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைப்பது வரை குங்குமடி தைலத்தின் பயன்பாடுகள் வேறுபட்டவை. இந்த ஆயுர்வேத எண்ணெய் வளமான வரலாற்றைக் கொண்ட பல்துறை தோல் பராமரிப்பு தீர்வாகும்.


    பொருட்கள் மற்றும் பண்புகள்

    குங்குமப்பூ, சந்தனம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் போன்ற சக்திவாய்ந்த பொருட்களின் கலவையை குங்குமடி தைலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் தனித்துவமான பண்புகளை வழங்குகிறது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகள், குங்குமடி தைலத்தை ஒரு சக்திவாய்ந்த தோல் பராமரிப்பு தீர்வாக மாற்றுகிறது . "குங்குமடி தைலத்தை ஒரே இரவில் பயன்படுத்தலாமா?" என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரே இரவில் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து புத்துயிர் பெறச் செய்து, காலையில் பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    குங்குமடி தைலத்தின் பலன்கள்

    குங்குமடி தைலம் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த உதவும் பல நன்மைகளை வழங்குகிறது. எண்ணெய் நிறமி மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இதனால் சருமம் கதிரியக்கமாகவும், சீரான நிறமாகவும் இருக்கும். கூடுதலாக, இது சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.


    குங்குமடி தைலத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும் திறன் ஆகும். குங்குமப்பூ மற்றும் குங்குமப்பூ தைலத்தில் உள்ள மற்ற சருமத்தை பிரகாசமாக்கும் பொருட்களின் கலவையானது கரும்புள்ளிகள், நிறமி மற்றும் சீரற்ற தோல் நிறத்தின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக மிகவும் ஒளிரும் மற்றும் இளமை நிறம் கிடைக்கும்.

    வயதான எதிர்ப்பு மற்றும் சுருக்கம் குறைப்பு

    குங்குமடி தைலம் முதுமையைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த கலவையானது சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது. குங்குமடி தைலத்தின் வழக்கமான பயன்பாடு, உறுதியையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது, மேலும் சருமத்திற்கு இளமை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.

    முகப்பரு மற்றும் தழும்பு கட்டுப்பாடு

    குங்குமடி தைலம் முகப்பருவைக் கட்டுப்படுத்துவதிலும், தழும்புகளைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாடு பிரேக்அவுட்களைக் குறைக்கவும், தெளிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவும். குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    ×