search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tips"

    • சாப்பிட்ட பிறகு கற்கண்டை உண்டால் ஒவ்வாமை நீங்கும்.
    • கீரை சமைக்கும்போது சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * மட்டன் பிரியாணி செய்யும்போது ஆட்டிறைச்சி துண்டுகளை சிறிது எலுமிச்சை சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு பிரியாணி செய்தால் வாடை இருந்தாலும் நீங்கி விடும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * சாப்பிட்ட பின்பு வெள்ளை கற்கண்டை உட்கொண்டு வந்தால் ஒவ்வாமை நீங்கும். எளிதில் ஜீரணமாகும்.

    * உளுந்த வடைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிது பச்சரிசி மாவை தூவினால் போதும். கெட்டித்தன்மையாகிவிடும்.

    * கீரை சமைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.

    * மலச்சிக்கல் பிரச்சினையை அதிகம் சந்திப்பவர்கள் அடிக்கடி உணவில் பப்பாளிக்காய் கூட்டு அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    * மோர்க்குழம்பு மீந்துவிட்டால் பருப்பு வடைகளை துண்டுகளாக வெட்டிப்போட்டு பரிமாறலாம்.

    * தேங்காய் சட்னி மீந்து போனால் வீணாக்க வேண்டாம். அதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்திசுடலாம். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் அதிகமாக கரி படிவதை தடுக்க ஆங்காங்கே பேப்பர்களை தொங்க விடலாம்.

    * கை கழுவும் இடம் அல்லது பாத்திரங்களை தேய்க்கும் இடமான 'சிங்க்'கில் வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.

    * குழம்பு மீன், வறுத்த மீன் அதிகம் விரும்பி சாப்பிட்டால் அதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது. சீக்கிரம் செரிமானமாக நாட்டுச்சர்க்கரை அல்லது பழம் உட்கொள்ளலாம்.

    * கறிவேப்பிலை துவையல், புதினா ரசம் அல்லது துவையல், வல்லாரை கீரை துவையல் அல்லது ரசம் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும். ரத்தம் சுத்தமாகும்.

    • ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும்.
    • கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டால் கல் உப்பு தடவினால் கொப்பளம் உண்டாகாது.

    * தோசைக்கு ஊறவைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவையான, சத்தான தோசை ரெடி.

    * கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலையை பொடித்து கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை ஏற்படும்.

    * எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் `பிரஷ்'ஷாக இருக்கும். அந்த பழங்களில் இருந்து நிறைய சாறும் கிடைக்கும்.

    * தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால் அதை பாலில் ஊறவைத்து மீண்டும் கிளறி, இறக்கும் போது நெய்யில் வறுத்த கடலைமாவை சிறிது தூவி இறக்கினால் பர்பி சரியான பதத்துக்கு வந்துவிடும்.

    * மிளகாய் பொடிக்கு வறுக்கும்போது ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து அவற்றையும் அரைக்கலாம். கறி வகைகள் செய்யும்போது இந்த பொடியை தூவினால் சுவையாக இருக்கும்.

    * கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறினால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவு கலந்து, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுந்து மாவு கலந்து தோசை வார்த்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

    * ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது தண்ணீரின் அளவில் பாதி குறைத்துவிட்டு அதற்கு பதில் கெட்டியான பால் சேர்க்க சுவை கூடும்.

    * வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சளி சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கும். இதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது.

    * சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டுவிட்டால், அந்த இடத்தில் தேன் அல்லது கல் உப்பை சிறிது தடவினால்கொப்பணளம் உண்டாகாது.

    * தயிர் பச்சடி, சாலட் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வாசனையாக இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது சிறிது கோதுமையும், ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து அடை செய்தால் மொறுமொறுவென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * முற்றிய முருங்கைக்காய்களின் விதைகள் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலை போல் ருசியாக இருக்கும். உடலுக்கும் வலு சேர்க்கும்.

    * ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக்கீரை சேர்ப்பதால், சத்தாகவும் இருக்கும்.

    • தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
    • சாதம் வடித்த தண்ணீரில் சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

    இல்லத்தரசிகளின் மிகப்பெரிய ஆசைகளின் ஒன்று, தினமும் தனது கணவர், பிள்ளைகளுக்கு வகைவகையான ருசிகளில், உணவு வகைகளை சமைத்து தருவதாக தான் இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச்சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில் சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    * தேங்காய் சட்னி அரைக்கும்போது மல்லி தழையை சிறிது வதக்கி சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * உளுந்து வடை மொறுமொறுவென்றும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமா? உளுந்து அரைக்கும்போது அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு அரைத்தால் போடும். உளுந்து வடை மிருதுவாக இருப்பதோடு எண்ணெய்யும் அதிகம் உறிஞ்சாது.

    * மணத்தக்காளி கீரையை சமைத்தால் சிறிது கசப்பு தெரியும். அது தெரியாமல் இருக்க, கீரையோடு சிறிது பீட்ரூட் துண்டை சேர்த்து பொரியல், துவையல் செய்யலாம். கசப்பு தெரியாமல் இருப்பதோடு சுவையும் கூடும்.

    * வீட்டில் காய்கறி சூப் செய்யும்போது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைப்பதை விட, சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி சூப் தயாரித்தால் சுவையாக இருக்கும். சத்தும் மிகுந்திருக்கும்.

    * சர்க்கரை பொங்கல் தயாரிக்கும்போது வெல்லத்தை அப்படியே போட்டால் கரைவதற்கு நேரம் கூடுதலாகும். பாத்திரத்தின் அடியிலும் பிடிக்கும். அதனை தவிர்க்க வெல்லத்தை காய்கறி சீவும் உபகரணத்தில் சீவி, சேர்த்தால் சீக்கிரம் கரைந்துவிடும். அடியிலும் பிடிக்காது.

    * முட்டை வேக வைக்கும் பாத்திரத்தில் ஒருவித வாடை வீசும். அதில் சிறிது சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி, ஊறவைத்துவிட்டு கழுவலாம். வாடை நீங்கிவிடும்.

    * தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம். அப்படி கடலை மாலை கலக்கி வார்த்தால் தோசை மொறுமொறுவென்றும், நிறமாகவும் இருக்கும்.

    * சிக்கன் 65 தயார் செய்யும்போது எல்லா மசாலா கலவையையும் போட்டு ஊற வைத்து பொறிப்பதற்கு முன்பு சோளமாவை சேர்த்தால் பிசுபிசுப்பு இல்லாமல் மொறுமொறுவென்று இருக்கும்.

    • சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.
    • சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    காரக்குழம்பு தயாரிக்கும்போது காரம் அல்லது உப்பு சுவை அதிகமாகிவிட்டால், சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம். தயிர் அல்லது தேங்காய்ப் பாலை குழம்பில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்தாலும் காரம் கட்டுப்படும்.

    உருளைக்கிழங்கு அல்லது சவ்சவ் காயை பெரிய துண்டுகளாக வெட்டி குழம்பில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உருளைக்கிழங்கு குழம்பில் உள்ள காரத்தையும், உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும். சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து குழம்புடன் கலந்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    சாதம் வடிக்கும்போது உப்பு கூடினால், எலுமிச்சம் பழச்சாறு அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும். இது பிரியாணியில் உள்ள உப்பை கட்டுப்படுத்தும். காரத்தைக் குறைக்க உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சேர்க்கவும். வெல்லப்பாகு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்தாலும் பிரியாணியில் காரத்தை கட்டுப்படுத்த முடியும்.

    ரசத்தில் பளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும், இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.

    சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் கேரட், தக்காளி, பீட்ரூட் அல்லது சவ்சவ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு காயை நன்றாக அரைத்து. எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும். தேங்காய் சட்னியில் காரம் அல்லது உப்பு அதிகமானால், பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.

    ஜூஸ் தயாரிக்கும்போது ஐஸ்கட்டியின் அளவு கூடினால், சுவை குறையும். அத்தகைய சமயத்தில் அதில் சிறிதளவு சிட்ரஸ் பழச்சாறு, சப்ஜா விதைகள், வெள்ளரி விதை அல்லது இளநீர் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    அசைவ சமையலில், இறைச்சி அதிகமாக வெந்து விட்டால், ஆலிவ் எண்ணெய், இனிப்பு மற்றும் காரம் கலந்த சாஸ் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம். உணவை எப்போதும் மிதமான சூட்டில் வைத்திருந்தால் இறைச்சி மென்மையாகவே இருக்கும். அசைவ உணவுகளை சமைத்த உடனே ஹாட் பேக்கில் போட்டு வைக்கலாம். இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    ஊத்தப்பம் தயாரிக்கும்போது சுற்றிலும் எண்ணெய் ஊற்றியதும் உடனே ஒரு முடிபோட்டு மூடவும், சில வினாடிகளுக்குப் பின்னர் முடியை எடுத்து பார்த்தால் இரண்டு புறமும் சீராக வெந்திருப்பதோடு. ஊத்தப்பம் மிருதுவாகவும் இருக்கும்.

    • வெங்காயம் கெடாமல் இருக்க வெயிலில் உலர்த்தி இருக்க வேண்டும்.
    • புளியை போட்டு வைத்தால் கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்குப் பதிலாக பாலை பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    2. சில நேரம் பருப்புகள் வேகாமல் இருக்கும். அப்போது சிறிது நெய்யை சேர்த்து பாருங்கள். எந்த வேகாத பருப்பும் நன்கு வெந்து விடும்.

    3. குழம்பிலோ, சட்னியிலோ உப்பு அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் போட்டால் போதும். அதிக உப்பு உடனே உறிஞ்சப்பட்டு விடும்.

    4. அடை, இடியாப்பம், இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றின் மாவில் கற்பூரவல்லி இலைகளை சிறிதளவு போட்டு அரைத்து சேர்த்தால் வாசனையாக இருக்கும். சாப்பிட்ட உடனே ஜீரணமாகிவிடும்.

    5. ஒரே பாத்திரத்தில் கேக், பிஸ்கட்டுகளை போட்டு மூடி வைத்தால் பிஸ்கட்டுகள் நமத்து போய்விடும். அவற்றை தனித்தனியாகத்தான் வைக்க வேண்டும்.

    6. வடை, போண்டா, பஜ்ஜி செய்யும் போது, மாவை பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு செய்தால் அவற்றை சுடுவது மிக எளிதாக இருக்கும்.

    7. கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்க சிறிதளவு புளியை அதில் போட்டு வைத்தால் போதும். நீண்ட நாட்கள் எண்ணெய் கெடாமல் இருக்கும்.

    8. உருளைக் கிழங்கு தோலிலும் சத்து உள்ளது. எனவே சமைக்கும் போது வீணாக தோலை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

    9. சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவை அரிக்கும் தன்மை கொண்டவை. அவற்றை வாங்கியதும் உடனே சமைக்காமல் ஒரு வாரம் வைத்திருந்து அதன்பின் சமைத்து சாப்பிட்டால் அரிப்பு தெரியாது.

    10. முட்டைகள் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கணுமா? ரொம்ப சிம்பிள். முட்டைகளின் மீது சமையல் எண்ணெய்யை தடவி வைத்தால் போதும்.

    11. பருப்புகளை மழை நீரில் வேக வைத்தால் சூப்பர் பாஸ்ட்டாக ஒரே கொதியில் வெந்து விடும். ருசிக்கும் குறை இருக்காது!

    12. ஒரு மாதம் வரை வெங்காயம் கெடாமல் இருக்க, அதை வாங்கியதும் உடனே வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்து வைத்தால் போதும்.

    • பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.
    • சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது.

    * தோசைக்கு அரைக்கும்போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

    * கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு சேர்த்து சப்பாத்தி தயார் செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

    * பருப்பை வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்து விடும்.

    * சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

    * உப்பை ஜாடியில் கொட்டும் போது ஒரு ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

    * குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, குழம்பு பதமாக வரும்.

    * சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள் மற்றும் முட்டை உணவுகளை சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்த குழம்பின் சுவை, தரம் மாறிவிடும்.

    * ஒரு முறை பிரீசரில் வைத்து எடுத்த உணவை சமைத்த பின்னர் மீண்டும் பிரீசரில் வைத்தால் கெட்டு விடும்.

    * சமைத்த உணவு அதிகமாக இருந்தால் அதை தனித்தனியாக பிரித்து பிரீசரில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.

    * பிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது, சின்ன டப்பாக்களை பயன்படுத்தினால் இடம் அடைக்காமல் இருக்கும்.

    * பப்பாளித் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்து விட்டு பின்பு அதை எடுத்து கேக், பன் போன்றவைகளில் சேர்த்து புருட்டி தயாரிக்கலாம்.

    * பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.

    * ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக பழுத்த பழங்களை பயன்படுத்தாமலோ, பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமலோ ஜாம் தயாரித்தால் அது புளிப்புத் தன்மையாகிவிடும்.

    * ஜாம் தயாரிக்கும்போது சரியான அளவில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் நிறமும், ருசியும் குறைந்து விடும். சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் ஜாம் கெட்டியாகிவிடும்.

    * அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

    * கீரை பசுமை மாறாமல் இருக்க காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

    * பச்சைப் பட்டாணியை வேகவைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

    • மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
    • ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.

    பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

    மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

    தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

    இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

    தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.

    ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

    தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.

    முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    • அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
    • கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.

    சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்ய வேண்டிய ஒரு அருமையான கலை. இதில், பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சமையல் செய்வதை விட பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டுபோகாமல் பாதுகாப்பதும் நமது கடமைதான். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    * முருங்கை பிஞ்சுகளை சிறு துண்டுகளாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால் ரசம் ருசியாக இருக்கும்.

    * வாழை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை துண்டுகளாக வெட்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    * அக்ரூட்டை முழுதாக சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்தால், எளிதாக உடைக்கலாம்.

    * மோரில் பச்சை மிளகாய்க்கு பதில் சிறிது சுக்கை பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    * கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.

    * தானியங்களை (பயறு வகைகள்) எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து 'ஹாட் பேக்'கில் போட்டு மூடி வைத்தால் மறுநாள் முளைகட்டிய தானியம் தயார்.

    * வடு மாங்காய் போட்டு சாறு மீந்து விட்டால் அதில் கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊறப்போட்டு காய வைத்து வத்தலாக எண்ணெய்யில் பொரித்து உபயோகிக்கலாம்.

    * கபாப் செய்யும்போது இரண்டு பிரெட் துண்டுகளை நனைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும். சாம்பார், கூட்டு நீர்த்துப் போனால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு புது பிரெட் துண்டுகளை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து மசித்து விட வேண்டும். சாம்பார், கூட்டு கெட்டியாகி சுவையூட்டும்.

    * கோதுமை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால் ருசியாக இருக்கும்.

    * எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதனுடன் இட்லியை உதிர்த்து எண்ணெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

    * பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெய்யில் தண்ணீர் கலந்திருந்தால், ஒரு துண்டு வாழை இலையை போட்டு வைக்கலாம். எண்ணெய் வெடிப்பது குறையும்.

    • துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
    • குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

    உங்கள் ஃபிரிட்ஜில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது என்பது சாதாரணமான வேலை அல்ல. ஆனால், அந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்றும், அந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஃபிரிட்ஜை எப்படி சுத்தப்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    முதல் படி, உங்கள் குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கெட்டுப்போன அல்லது காலாவதியான உணவுப் பொருட்களை குளிர் சாதன பெட்டியில் இருந்து அகற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் வீசுவதற்கு இவை முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். ஆதனால், தினமும் உங்கள் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.

    பேக்கிங் சோடா

    உங்கள் ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடாவை வைக்க வேண்டும் அல்லது பேக்கிங் சோடா நிறைந்த ஒரு சிறிய கிண்ணத்தை குளிர்சாதன பெட்டியின் அலமாரியில் வைக்கவும். இது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி அவற்றை அகற்ற உதவும். இதனை 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    காபி பொடி

    குளிர்சாதன பெட்டியில் புதிதாக அரைக்கப்பட்ட காபி பொடியை கிண்ணத்தில் வைக்கவும். காபி பொடி உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாசனையை உறிஞ்சி மறைக்க உதவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் அவற்றை மாற்ற வேண்டும்.

    வெண்ணிலா சாறு

    வெண்ணிலா சாற்றில் ஒரு பருத்தி உருண்டை அல்லது ஒரு துணியை ஊறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெண்ணிலா ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டுள்ளது, இது மற்ற வாசனைகளை மறைக்க உதவும்.

    சிட்ரஸ் தோல்கள்

    எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மற்றும் பழங்களின் தோலை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சிட்ரஸ் பழத்தோல்கள் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை கொண்டவை. இவை இயற்கை எண்ணெய்களை வெளியிடுகின்றன.

    வெள்ளை வினிகர்

    தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர் ஆகியவற்றில் சம பாகங்களை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை கொண்டு உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் உட்புறத்தைத் துடைக்கவும். வினிகர் கெட்ட நாற்றங்களை அகற்ற உதவும். இப்போது உங்கள் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசாது.

    • ஆண்கள் அணியும் ஆடைகள் பெண்களின் தேர்வாகவே இருக்கும்.
    • 'கலர் காம்போ' ஆலோசனைகள் இங்கே.

    பல வீடுகளில் ஆண்களுக்கு பொருத்தமான ஆடைகளை பெண்களே தேர்ந்தெடுப்பார்கள், தினசரி அலுவலகத்துக்கு அணிய வேண்டிய ஆடைகள், நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் என எதுவாக இருந்தாலும், ஆண்கள் அணியும் ஆடைகள் பெண்களின் தேர்வாகவே இருக்கும்.

    அந்த வகையில் தங்கள் அப்பா, கணவர், மகள், அண்ணன், தம்பி அல்லது நண்பர்களுக்காக ஆடை வாங்கும் பெண்களுக்கான பிரத்தியேக 'கலர் காம்போ' ஆலோசனைகள் இங்கே..

    ஆடைகளை பொறுத்தவரை அடர் நிற காம்போ. வெளிர் நிற காம்போ, அடர் மற்றும் வெளிர் நிறம் கலந்த காம்போ என்று மூன்று 'காம்போ வகைகள் உள்ளன. அனைத்து வகையான சரும நிறம் கொண்டவர்களுக்கும், பின்வரும் காம்போ நிறங்கள் எடுப்பாக இருக்கும்.

    அடர் நிற காம்போ:

    அடர் நிற காம்போவோடு கருப்பு நிறத்துடன் எந்தவொரு அடர் நிறத்தை இணைத்தாலும், அது எளிதில் ஒத்துப்போகும். எனினும், தற்போது கருப்பு நிற பேண்ட்டுடன் சாம்பல், அடர் பழுப்பு நிறம், இண்டிகோ நீலம், அடர் சந்தன மஞ்சள், ஒயின் சிவப்பு, பேஷன் பெர்ரி மற்றும் திராட்சை நிற பழுப்பு நிற சட்டையும் தற்போது டிரெண்டில் இருப்பவையாகும். இதுதவிர மல்பெர்ரி, ராசின், பிளம், கத்தரி, சங்கரியா, மெர்லட் போன்ற நிறங்களை கொண்ட பர்பிள் மற்றும் சிவப்பு நிற களிலும் ரக்ரோஸ் நிறம், ஆக்கேர் மஞ்சள் நிறம். ஆர்மி மற்றும் ஹண்டர் பச்சை நிற வகைகளிலும், இஸ்டிகோ, நேவி, பீக்காக், டினிம், பெர்ரி போன்ற நிற எண்களைக் கொண்ட நீல நிற வகைகளிலும் பேண்ட் மற்றும் சட்டைகளை தேர்ந்தெடுக்கலாம்.

    வெளிர் நிற காம்போ:

    வெளிர் நிற காம்போ உடைகளை பொறுத்த வரை பேண்ட், சட்டை என இரண்டுமே வெளிர் நிறத்தில் இருக்கும். இதற்கு பெரும்பாலும் பேஸ்டல் நிறங்களும், பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் நிறங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஆலிவ் பச்சை, எலுமிச்சை மஞ்சள், புதினா பச்சை, டிபானி மற்றும் பிரிக்கியோசிஸ் நீலம், கிரீம், பிரிட்ஜ், பிளக்ஸ் மற்றும் ஷாபரான் மஞ்சள், பிளஸ் சிவப்பு, பபுள்கம், பிளம்மிங்கோ, கோரல் மற்றும் சாலமன் ரோஸ் நிற வகைகள் தற்போது டிரெண்டில் உள்ளன.

    பழங்களை அடிப்படையாகக் கொண்ட நிறங்கள்:

    மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறம், வாழைப்பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் பச்சை மற்றும் நடுநிலையான மஞ்சள் மற்றும் மெரூன் நிறம், தர்பூசணியை அடிப்படையாகக் கொண்ட அடர் பச்சை, அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம், கொய்யாப் பழத்தை அடிப்படையாக கொண்ட வெளிர் சிவப்பு, வெளிர் ரோஸ், கிரீம் வெள்ளை மற்றும் பச்சை நிறம், எலுமிச்சை பழத்தின் அடிப்படையில் வெளிர் பழுப்பு, பொளிர் மற்றும் அடர் பச்சை நிறம் போன்ற பழத்தை அடிப்படையாகக் கொண்ட அடர் மற்றும் வெளிர் நிற காம்போக்கள் இப்போது டிரெண்டில் உள்ளன.

    • பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
    • இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.

    சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 3 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முந்திரி- 20

    பச்சை மிளகாய் - 4

    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.

    இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

    உபயோகிக்கும் முறை:

    இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    இட்லி தயாரிக்க:

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.

    குழிப்பணியாரம் தயாரிக்க:

    அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.

    வடை தயாரிக்க:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

    • ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
    • அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

    * சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

    * மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.

    * பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.

    * அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

    * ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

    * ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.

    * சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

    * எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.

    * பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.

    * தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.

    * தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

    * மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

    ×