என் மலர்
நீங்கள் தேடியது "சரும துளைகள்"
- முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
- ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
முகப்பரு
ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன.
திறந்த துளைகள்
மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
பளபளப்பான சருமம்
ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது.
வீக்கம்
அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது.
ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்
வறண்ட சருமம்
வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும்.
சருமத்துளைகள்
ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரிப்பு
மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும்.
- வெந்நீரில் முகம் கழுவக் கூடாது.
- ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது.
சருமத்தில் துளைகள் ஏற்பட காரணம்:
சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் வியர்வை காரணமாக இந்த துளைகள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக சருமம் உயிரற்றதாக தோன்றுகிறது.
திறந்த துளைகள் தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், தூசி மற்றும் பாக்டீரியாக்களும் இந்த துளையில் எளிதில் குவிந்துவிடும். இது பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தவிர, திறந்த துளைகள் காரணமாக, தோல் வயதான அறிகுறிகளும் விரைவாக தோன்றத் தொடங்குகின்றன.
நீங்கள் முகம் மற்றும் மூக்கில் திறந்த துளைகளின் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், இது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிவது மிகவும் முக்கியம்.

செய்யக்கூடாதவை:
வெந்நீரில் முகம் கழுவக் கூடாது
வெந்நீரில் முகத்தைக் கழுவுவதால், சருமத்தின் திறந்த துளைகள் பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்.
அதீத மேக்-அப் போட வேண்டாம்
கனமான அல்லது அதீதமாக மேக்-அப் போடுவதால் சருமத்துளைகளில் மேக்கப் தேங்கி, சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படும். சில பொருட்கள் துளைகளில் தேங்கி அது பாதிப்பை அதிகமாக்கக்கூடும். நீங்கள் மேக்கப் அணிய வேண்டியிருந்தால், துளைகளை அடைக்காத லேசான ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

அழுத்தமாக சுத்தம் செய்யக் கூடாது
ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை இழந்து, துளைகள் இன்னும் பெரிதாகிவிடும்.
திறந்த துளைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். திறந்த துளைகளின் சிக்கலைத் தவிர்க்க, உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் முகத்தின் தோலின் வகைக்கு ஏற்ப ஒரு க்ளென்சரை வாங்கி, அதைக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கும்.

எக்ஸ்ஃபோலியேட்
திறந்த துளைகளின் சிக்கலைத் தவிர்க்க, வாரத்திற்கு 1-2 முறை உரித்தல் செயல்முறை செய்ய வேண்டும். இது திறந்த துளைகளின் அளவைக் குறைக்கிறது. அதேபோல் துளைகளுக்குள் தேங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்ற இது உதவும்.

டோனர் பயன்படுத்தவும்
டோனர் துளைகளை இறுகச் செய்கிறது. மூக்கின் மேற்புறத்தில் இருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி துளைகளை மூட உதவியாக இருக்கும்.
உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப நல்ல டோனரை தேர்வு செய்யவும், இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் துளைகளை குறைக்க உதவுகிறது.
முகத்தை ஈரப்பதமாக்குங்கள்
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மாய்ஸ்சரைசர் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது தவறு. சரியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, துளைகளை மூட உதவியாக இருக்கும்.
உங்கள் சருமம் எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், லேசான மற்றும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.






