என் மலர்
நீங்கள் தேடியது "Face"
- முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
- ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
முகப்பரு
ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன.
திறந்த துளைகள்
மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
பளபளப்பான சருமம்
ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது.
வீக்கம்
அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது.
ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்
வறண்ட சருமம்
வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும்.
சருமத்துளைகள்
ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரிப்பு
மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும்.
- பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம்.
- நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது.
மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுக்கும்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை அணிவோம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அளவு
தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்ணுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு 'எல்', கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு 'எம்', கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு 'எஸ்' ஆகும்.
சதுர முக அமைப்பு
பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது 'டி' வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட 'ஓவல்' வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வட்ட வடிவ முக அமைப்புக்கு..
பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, 'கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்' அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...
நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதய வடிவ முக அமைப்பினருக்கு..
கிளாசிக் 'ஏவியேட்டர்' கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற 'ரிம்லெஸ்' கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் காட்சியளிக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது.
- வெள்ளரிக்காயை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழித்து செல்வதை விட, வீட்டிலேயே உட்கார்ந்து பணம் அதிகம் செலவழிக்காமல் வெறும் இயற்கைப் பொருட்களாலேயே சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை முறையாக அழகு நிலையங்களில் பராமரிப்பது போன்றே செய்யலாம். இப்போது வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்பற்றினால், உடனடிப் பலனை பெறலாம்.
வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் முன், முகத்தை நன்கு நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக முகத்திற்கு க்ரீம் போட்டிருந்தால், அதனை முற்றிலும் நீக்கி விட வேண்டும். அதிலும் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்துக் கொண்டு, முகத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கிவிடும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்கின் மூலம் பொலிவான சருமம் பெற வேண்டுமானால், புதினாவை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் புதினாவானது முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். எனவே வெள்ளரிக்காய் மாஸ்க் செய்யும் போது, அத்துடன் புதினாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மாஸ்க் போடும் போது வசதியாக இருக்கும். குறிப்பாக இத்துடன் புதினா சேர்த்துக் கொள்ளவும். அரைத்த வெள்ளரிக்காயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் மாஸ்க் தயார் ஆன பின்பு, அதனை முகத்தில் தடவ வேண்டும். ஆனால் கண்களைச் சுற்றி தடவக்கூடாது. ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம். இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர், கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் போடலாம். இந்தமாஸ்க் சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
- முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
- மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும்.
நம் முகம் பளிச்சென்று, எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம். எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள். மேக் அப் செய்தாலும் பயனற்று போகிறது.
சீபம் எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.
உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். சருமத் துளைகள், முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, 'பிளாக்ஹெட்' எனப்படும் முகத்தில் தோன்றும் கரியநிற முற்கள், முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம்.
சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன?
• உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் அவ்வாறே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இது மரபுவழியாக வர வாய்ப்புண்டு.
• பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். வயது கூடும் போது சருமத்தில் எண்ணெய் தன்மை குறையும்.
• பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெருமளவு பாதிக்கிறது. வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது.
• முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
• ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்கச் செய்கிறது. பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
• மன இறுக்கம், உடல் நலக்குறைவு காரணமாகக் கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
• சருமத் துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும்போது இப்படி ஆக வாய்ப்புண்டு.
• சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.
- உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம்.
முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும். சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாகவும் வேர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் முகத்தில் வேர்க்கலாம்.
அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதாலும் வியர்வை முகத்தில் சுரக்க செய்யும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வெப்பமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக்க தன்னை தானே உடல் வியர்வை சுரக்க செய்யும். அதனால் உணவு முறைகள் மூலம் குளிர்ச்சியானவைகளை உண்ண வேண்டும்.

உடல் மற்றும் முகம் வியர்க்கும்போது குளிக்கலாம். முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவலாம். இதனால் வியர்வை வடிவதை தடுக்க முடியும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வேர்க்கும். அதனால் முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது நல்லது.
- முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
- இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய மொழி. அகத்தில் சோர்வு இருந்தாலும் முகத்தில் தெரியக்கூடாது என்பது புது மொழி.
இந்த புதுமொழிக்கு ஏற்ப, முகத்தை பொலிவாக்க பல்வேறு மேக் அப் கலைகள் வந்து உள்ளன. அதில், கான்டூரிங் மேக்கப் முக்கியமானது.
பொதுவாக, திருமணம் நிச்சயதார்த்தம், வரவேற்பின் போது மணப்பெண்ணால் சரியாக தூங்க முடியாது சோர்வாக – களைப்பாக இருப்பார். இதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும்.
அந்த சூழலில் முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
மேக்கப்களில் முகத்தில் தண்ணீர் பட்டாலோ அல்லது வியர்வை வழிந்தாலோ கலைந்து விடும். இந்த நிலையை மாற்ற, புதிய முறைகள் அறிமுகமாகிவிட்டன.

வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் வகைகள் என பல உண்டு. இவற்றில், முதலாவது மேக்கப் வகையான வாட்டர் ஃப்ரூப் மேக்கப் முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் கலையாமல் இருக்கும்.
'ஏர் பிரஷ் மேக்கப்' என்பது தனி வகை. இது முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் ஆகியவற்றை மறைத்து விடும். முகம் முழுக்க ஒரே கலரில் அழகாக தோன்றும்.
இன்னொன்று எச்.டி மேக்கப். இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை. இது முகத்தை வண்ணமயமாக காட்டும்.
அடுத்து கான்டூரிங் மேக்கப். இதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் சொல்வது உண்டு. சப்பையான நாசியை எடுப்பாகக் காட்டவும், சற்று பூசினாற் போல இருக்கும் கண்ணங்களை ஒல்லியாக காட்டவும் உதவும்.






