என் மலர்
நீங்கள் தேடியது "face glow"
- முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
- ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
முகப்பரு
ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன.
திறந்த துளைகள்
மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
பளபளப்பான சருமம்
ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது.
வீக்கம்
அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது.
ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்
வறண்ட சருமம்
வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும்.
சருமத்துளைகள்
ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரிப்பு
மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும்.
- குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
- 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும்.
முகம் எப்போதும் ஒளிர வேண்டும். நமது சருமத்துக்கு ஊட்டச்சத்து வேண்டும். பராமரிப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குங்குமப்பூ க்ரீமை பயன்படுத்தலாம்.
கடைகளில் குங்குமாதி தைலம் என்று பல புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெயருக்கேற்றபடி இது சற்று கூடுதலான விலைதான். அதேநேரம் நாம் வீட்டிலேயே தயார்செய்யும் குங்குமாதி க்ரீம், பார்லருக்கு சென்று அழகை பராமரிக்க செய்வதை காட்டிலும் குறைந்த விலை தான். இந்த குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்
குங்குமப்பூ
ஆலிவ் ஆயில்
பாதாம் ஆயில்
ரோஸ் வாட்டர்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
செய்முறை:
ஒரு சிறிய டப்பாவில் குங்குமப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல்லை போட்டு அதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணை, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும். இல்லை என்றால் பிளெண்டர் கொண்டும் பேஸ்ட் மாதிரி அடித்து எடுத்துக்கொள்ளலாம். இப்போது குங்குமாதி க்ரீம் தயார்.
இதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும். இதனை முகம், கை, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
முகத்தில் இறந்த செல்கள் இருக்கும் போது முகம் எப்போது மந்தமாக இருக்கும். முகத்தில் சருமத்தை பழுப்பு நிறமாக காண்பிக்கும். குங்குமாதி க்ரீம் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.
குங்குமாதி க்ரீம் முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளை வெளியேற்ற உதவுகிறது. சரியான முறையில் இதை பயன்படுத்தினால் நீங்கள் விரும்பும் பேரழகை பெறமுடியும்.






