என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Diseases"

    • சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பப்பாளி.
    • சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம்.

    பப்பாளி சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?.  பப்பாளியால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? அது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

    முகப்பரு கட்டுப்பாடு

    பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இறந்த செல்கள் அகற்றப்படுவதால் முகத்தில் பருக்களின் அளவு குறையும். 

    முகச்சுருக்கம்

    பப்பாளியில் 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட் அதிகளவு உள்ளது. இது தோல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.  2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி , பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும். 

    சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்

    பப்பாளியில் பயனுள்ள நொதிகள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த மற்றும் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் மாசுக்களை அகற்ற உதவும். பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. 

    தோல் நோய்கள்

    பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி நொதிகள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.

    ஈரப்பதம்

    பப்பாளியில் அதிக அளவு உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் வறண்ட, தோல் உரியும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன. பப்பாளி கூழை உங்கள் சருமத்தில் தொடர்ந்து தடவுவது சருமத்தை மென்மையாக்கி அதன் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவும்.

    அடிமுதல் நுனிவரை

    பப்பாளி பழம் மட்டுமின்றி பப்பாளிச் செடியின் பல பாகங்களும் சருமத்திற்கு நன்மை பயக்கும். சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம். பப்பாளியின் நன்மைகளை வெவ்வேறு வடிவங்களில் எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.


    பழம், சாறு, இலை என அனைத்து வடிவங்களிலும் சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கிறது பப்பாளி

    பழம்...

    பப்பாளியை பச்சையாகவோ, பழுத்ததாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சாப்பிடுவதைத் தவிர, மசித்த பப்பாளி கூழை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். மசித்த பப்பாளி கூழில் தேன், மஞ்சள், எலுமிச்சை சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப) சேர்க்கலாம். பழுப்பு நிறத்தை நீக்க, சருமத்தை ஒளிரச் செய்ய,  ஈரப்பதத்தை தக்கவைக்க அல்லது ஊட்டமளிக்க இதைப் பயன்படுத்துங்கள்.

    விதைகள்

    பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. பப்பாளி விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உங்கள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும். 

    இலைகள்

    பொதுவாக மென்மையான, தெளிவான மற்றும் இளமையான சருமத்திற்கு பப்பாளி இலைகள் சாறு வடிவத்திலும், பேஸ்ட் வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலைகளில் புரதத்தை கரைக்கும் நொதியான பப்பெய்னும் உள்ளது. எனவே, அதன் இலையை அறைத்து அந்த சாற்றை இறந்த சரும செல்களை அகற்றவும், அடைபட்ட துளைகளை அழிக்கவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    சோப்பு

    பப்பாளியின் நன்மைகளைப் பெற இதுவே எளிதான வழி. பழச்சாறு, வைட்டமின் சி & ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆர்கானிக் பப்பாளி சோப்பு உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும், ஒழுங்கற்ற நிறமிகளைக் குறைக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.

    சாறு

    பப்பாளி ஜூஸ் உடனடி நீரேற்றம் மற்றும் பளபளப்பை வழங்கும். சாற்றில் பொட்டாசியம் இருப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் மந்தமான தன்மையை நீக்குகிறது.

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    ×