search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All plastic material"

    அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்யக்கூடாது என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார், பொருளாளர் மோர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பேசுகையில், தமிழக அரசு 2019 புத்தாண்டு முதல் 14 வகையான பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. மேலும் அதனை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்கிறோம்.

    இருப்பினும் இந்த தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் 14 வகையான தடை செய்யப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் கப் குறித்த அறிவிப்பு இல்லை. ஆனால் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அனைத்து வகையான பிளாஸ்டிக்கையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். இதனை செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் 14 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பெருமளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வங்கிக்கடனை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

    ×