search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduates"

    • டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மயிலாடு துறையில் உள்ள யூனியன் கிளப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும், இதில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    எனவே, வேலை தேடுபவர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சா ன்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடை யலாம். மேலும், இதில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண். 04364-299790-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியி டங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள லாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன்;-

    கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலிபணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    மதுரை

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination, 2023)" தொடர்பான அறிவிப்பை 3.4.2023-அன்று வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரி யிலும் உள்ளது.

    இந்த காலிபணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.

    தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்க ளிலும். தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த இணைய தளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய தொழிற்கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடியில் தனியார் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் படித்த பட்டதாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி முன்பு தனியார் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி மன்றத் தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, தி.மு.க. வர்த்தகஅணி துணை அமைப்பாளர் ரவி, உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, வார்டு கவுன்சிலர்கள்முகம்மது ஆபித், பாலாஜி, பசீர், பிரதீப் கண்ணன், அன்புராணி, சிவா, சரஸ்வதி, மும்தாஜ் பேகம், ராஜேந்திரன், சாரதா, சபானாதமீம், சரஸ்வதி பங்காளன், வணிகர்கள் சங்கத்தலைவர் அம்புரோஸ் தி.மு.க. வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் படித்த பட்டதாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். பலருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டது.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
    • மீன் வளடெக்னாலஜி, கோஸ்டல் என்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராமசாமி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பி.டெக் மீன்வள பொறியியல் முடித்தவர்களை மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.

    இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி மீன்வள உதவி ஆய்வாளர் 24 பணியிடத்திற்கும், மீன்வள ஆய்வாளர் 64 பணியிடத்திற்கும் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் மீன் வளடெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    மீன்வள பொறியியல் படித்தவர்களை மேற்கண்ட தேர்வுக்கு தகுதியாக சேர்க்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், மீன்வளத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மீன்வள பொறியியல் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் கடந்த ஜந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அலங்காநல்லூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை வேளாண்மை துறை தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பயனாளிகள் இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 21 வயது முதல் 48 வயது வரை உள்ளவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகள் தனது சொந்த மூலதனத்தில் வேளான் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவுகள் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.

    கலைஞர் திட்ட கிராமங்களான பண்ணைகுடி, அச்சம்பட்டி, மணியஞ்சி, பெரியஇலந்தைகுளம், வடுகபட்டி, தெத்தூர், எரம்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி, அய்யூர், முடுவார்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    • கொட்டாம்பட்டி பகுதியில் வேளாண் பட்டதாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுபாசாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோர்களாக மாற்ற ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    மானியம் பெற இளங்கலை வேளாண், தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் பயின்றவராகவும், 21 வயதில் இருந்து 40 வயது வரை இருக்க வேண்டும். பயனாளி அரசு, தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.

    மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க கூடாது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் தேர்வான வலைச்சேரி பட்டி, குன்னாரம் பட்டி, மேலவளவு, 18 சுக்காம்பட்டி, பதினெட்டாங்குடி, பூதமங்கலம் கிராம த்தினருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.
    • குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் கல்வி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க பட்டதாரிகள் அலைமோதினர். முதல் நாளான நேற்று முன்தினம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 106 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 86 பேர், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 127 பேர் என மொத்தம் 319 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 117 இடைநிலை, 54 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர்இன்று மாலை, 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா: மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.
    • விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 84-ம் ஆண்டு கல்லூரி நிறுவியோர், மற்றும் விளையாட்டு விழா நடந்தது இதில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார் கல்லூரி செயலாளர் ராஜுவ் குமார் ராஜேந்திரன், முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டு, வாலிபால், கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், கவிதை, கட்டுரை, பாட்டு, கோலப் போட்டி, ஓவியப், போட்டி, நடனப்போட்டி, ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள், மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில் சென்னை மத்திய நிறுவன செம்மொழி தமிழாய்வு முன்னாள் பதிவாளர் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான பேராசிரியர் முத்துவேல் மற்றும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் வீரமுத்து அனுராதா, ஜீவா, வேதாசலம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் முடிவில் துறை தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். #LSPolls #MNM
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

    மத்திய சென்னையில், கமீலா நாசர், வடசென்னையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வக்கீல்கள், முன்னாள் ஐஜி, முன்னாள் நீதிபதி ஆகியோரும் 8 தொழில் அதிபர்களும் வேட்பாளர்களாகி உள்ளனர்.

    21 பேரில், 15க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள். அனைவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில் 3 பேர் எம்.பில். பட்டதாரிகள்.

    2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென்சென்னையிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    ‘கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மார்ச் 24-ந்தேதி வெளியிடப் போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாத கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அடுத்த வேட்பாளர் பட்டியலில் சிநேகன் பெயரும் இடம்பெற உள்ளது.

    முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் கமல் கூறியதாவது:-

    எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    என் சின்ன வயதில் இருந்தே ஈர்த்த வாக்குறுதிகளைதான் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அளித்துள்ளன. அதை செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கி உள்ளோம்.

    நமது தமிழ் நாட்டை ஆங்கிலத்தில், ‘லேன்ட் ஆப் ரைசிங் சன்’ என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை 2 கட்டமாக பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LSPolls #MNM
    ×