search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக ஆசிரியர் பணி விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வந்த பட்டதாரிகள்.

    தற்காலிக ஆசிரியர் பணி விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

    • ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் கல்வி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க பட்டதாரிகள் அலைமோதினர். முதல் நாளான நேற்று முன்தினம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 106 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 86 பேர், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 127 பேர் என மொத்தம் 319 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 117 இடைநிலை, 54 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர்இன்று மாலை, 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×