என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vacancies"
- ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன.
- உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்
திருப்பூர்
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர், வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக உதவி மின் பொறியாளர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின் அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
இடுவம்பாளையம் மின் அலுவலக உதவி மின் பொறியாளர், சின்னக்கரை மற்றும் கூடுதலாக சில மின் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளது. முருகம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைப்புதூர் உட்பட துணை மின்நிலையங்களையும் கூடுதலாக கவனிக்கிறார்.
ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என கூறியிருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
- அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.
6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.
இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.
- மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் கலைமணி, பேரவை தலைவர் முருகையன், கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், முதன்மை செயலாளர் பாலக்கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் ராம்விலாஸ் பஸ்வான், ஒருங்கிணைப்பா ளர் மகேந்திரவேலன், பொருளாளர் வேல்முருகன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன் மற்றும் மாணவர் அணி தலைவர், இளைஞர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலா ளர் பரமசிவம், அமைப்பாளர் சுப்ரமணி, மாநில செயலாளர் ரகோத்த மன், நகர செயலாளர் முனியன், துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை யில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், நல அதிகாரி, நல ஆய்வாளர், உதவியாளர், பல்நோக்கு ஊழியர் போன்ற பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் நன்றி கூறினார்.
- ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
- 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களு ம் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜூலை 2023-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட த்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை( ஐ.டி.ஐ, டிப்ளமோ, என்ஜினியரிங்/ பி.டெக், நர்சிங், பார்மஸி) போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞ ர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம். இம்மு காமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்க ப்படுகிறது. தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள்,
சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கென தனி கேண்டீன் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர் நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
- தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) பாலு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லீக் எய்ட் டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் பிரிவில் அலுவலக உதவியாளா் 3 போ், தலா ஒரு வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, தோ்வுமுறை, விண்ணப்பம், விண்ணப்பிப்பதற்கான கால அவசகாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருப்பூா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
- 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
சேலம்:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்க ளைத் நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
அதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதியுடன் நிறை வடைந்தது. எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வை கணினி வழியே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியி டங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) நடை பெறவுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
- காலிபணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
மதுரை
மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination, 2023)" தொடர்பான அறிவிப்பை 3.4.2023-அன்று வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரி யிலும் உள்ளது.
இந்த காலிபணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்க ளிலும். தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணைய தளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.
இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.
- அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
- இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நகர்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் உதவியாளர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 84 பதவிகள் நிரப்பப்படுகிறது.
இதில் டாக்டர்கள்- 28, பல்நோக்கு சுகாதார பணியா ளர்கள்- 28, உதவியாளர்கள்-28 பதவிடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (10-ந்தேதி) அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
டாக்டர்கள் பதவிக்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ், அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ படிப்பு படித்திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். உதவியாளர்கள் பதவிக்கு 8-ம் வகுப்பு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் படிவங்கள் நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்சே லம் மாவட்டம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.