search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சி சொந்தமான  காலி இடங்கள் - வாடகை அடிப்படையில்   ஒதுக்கீடு
    X

    கோப்புபடம். 

    உடுமலை நகராட்சி சொந்தமான காலி இடங்கள் - வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு

    • சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்

    உடுமலை:

    உடுமலை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கு உடுமலை கிராம 4 வது எண் 68.69/1 ல் உள்ள 4. 81 ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு அல்லாத வணிக நோக்கத்திற்காக மட்டும் காலி நிலமாக 21/2 சென்ட் 5 சென்ட் 10, 15 சென்ட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் பரப்பளவுக்கு ஏற்ப சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலை உள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கு அருகில் உள்ள காலியிடத்தை முழுவதுமாக வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.முன்பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தற்போது செலுத்தப்படும் பணம் முன்பணம் மட்டுமே. வடிவமைப்பிற்கு பிறகு சதுர அடிக்காக நிலவாடகை உரிய விதிகளின்படியும் அரசாணை படியும் தொகை செலுத்திய பிறகு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பழனி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கடையில் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளுக்கு முன் ஏலம் நடைபெற உள்ளது .இதற்கும் விருப்பம் உள்ளவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×