என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- அனைத்து துறை பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில கவுரவ தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி சிங் வரவேற்பு நிகழ்த்தினார். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிரித்தம் செய்ய வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை பதவி உயர்வு குடும்ப நலநிதி வழங்க வேண்டும் தமிழக அரசியல் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களின் அரசு தோட்டக்கலை பணியில் பணிபுரியும் கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜோதி ராமலிங்கம், தலைமை நிலைய செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் மாயன், மாநில இணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்