search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board"

    • பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது52). மின்வாரிய அதிகாரி.

    இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் பொன்னகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை இருப்பு ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர்.

    காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சோதனை நடத்தி இவை எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    • ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.

    ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.

    • மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
    • நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

    நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மரியா ஆரோக்கியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துங்கள்.

    ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்றவைகளுக்கு 3 பின் சாக்கெட் பிளக்குகளை பயன்படுத்துங்கள்.

    மின் கசிவு தடுப்பானை இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்துங்கள். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுங்கள். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை வயரிங்குகளை சோதனை செய்து மாற்றுங்கள். மின் கம்பங்கள், அவற்றின் ஸ்டே வயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீதும் கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.

    மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தலாகவும், விளம்பர பலகை கட்டவும் பயன்படுத்தக்கூடாது.

    மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மின் கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை மின்வாரிய அலுவலர்கள் உதவியுடன் அகற்ற வேண்டும். அவசர நேரத்தில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும்படி மின் கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.

    மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    இடி, மின்னலின் போது வெளியே இருக்காதீர்கள். கான்கிரீட், கூரை வீடுகளின் கீழ் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையலாம். குடிசை, மரங்களின் கீழ் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கக்கூடாது. மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    மேலும் மின் புகார்களை மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் அப் எண்: 94458 51912 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.
    • அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 30 நிமிட நேரம் கழித்துதான் மின்சாரம் வந்தது.

    இது திட்டமிட்ட சதி செயல் என்று அரசு மீது பா.ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் மின்தடை ஏற்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை. மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.

    ஒரு மாநிலத்திற்கு மிக முக்கிய வி.ஐ.பி. வரும்போது 24 மணிநேரமும் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். அதை கடைபிடித்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

    ஆனாலும் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.

    இது தொடர்பாக இப்போது அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் மணி வண்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகையின் போது அவர்கள் வந்து செல்லும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் முன் கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இதற்காக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
    • தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து நேற்று இரவு திருவட்டத்துறை, கொடிக்க ளம் கிராமமக்கள் விருத்தா சலம்- திட்டக்குடி சாலை யில் கொடிக்களம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடு பட்டிருந்த பொது மக்களி டம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெரில் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். விழுப்புரம் மாவட் டத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் அரகண்ட நல்லூரில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார பிரமுகர்களும் தொடர் மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் காரணம் கேட்கும் பொழுது ஏன் மின்வெட்டு ஏற்படுகின்றது என்கிற காரணம் எங்களுக்கே தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் பதில் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அறி விக்கப்படாத மின்வெட்டுக் கான காரணம் என்னதான் என புரியாமல் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.

    • கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என மின்வாரியம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகை தரும் இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக் கூடாது என்றும், தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனினும், இதனை சில மின் பகிர்மான வட்டங்களில் பின்பற்றுவதில்லை.

    இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், அதன்படி, அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் (அவசர காலங்களைத் தவிர) பராமரிப்பு மின்தடை செய்யக் கூடாது, நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் நிகழ்வு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும், துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதையும், அவசர கால மின் தடையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருப்பதையும் உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்பகிர்மானப் பிரிவு இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).

    இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்–டும்.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என கூறியுள்ளது.

    கமுதி

    கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கமுதி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கமுதி நகர், கமுதி தெற்கு, கமுதி வடக்கு மற்றும் பெருநாழி அபிராமம் பிரிவு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அனுமதி இன்றி மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்கள் மற்றும் சாதனங்களை மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் நலன் கருதி மின் கட்டமைப்புகளில் அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
    • பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

    பல்லடம்:

    பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×