search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை வியாசர்பாடி, மாதவரம்: லெதர் எஸ்டேட், கே.கே.ஆர். டவுன்) கம்பன் நகர், முல்லி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணேஷ் நகர், ஸ்ரீ ஸ்ரீநீவாச பொருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர், 1-வது மெயின் ரோடு எம்.எம்.டி.எ. 1 பகுதி, எடைமா நகர், ஆவின் குடியி ருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்பு ஹவுஸ், சி.எம்.பி.டி.டி., தாத்தாங்கு ளம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    சித்தாலபாக்கம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சி.பி.ஒ.எ. காலனி, வீனஸ் காலனி, எம்.ஜீ.ஆர். தெரு.

    எம்பாசி: (பெரும்பாக்கம்) எம்பாசி அப்பார்மெண்ட் பகுதி.

    கிருஷ்ணா நகர்: (பள்ளிக்கரணை) ராஜலட்சுமி நகர், துலக்காணத்தம்மன் கோயில் தெரு, வள்ளாள பாரி நகர், ரங்கநாதபுரம்.

    கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்களம் ஒரு பகுதி.

    மாடம்பாக்கம்: வேங்கை வாசல் மெயின் ரோடு, நகர், புனித ஜான்ஸ் தெரு, தாமஸ் தெரு.

    அடையார்: வேளச்சேரி பைபாஸ் ரோடு, மெட்ரோ வாட்டர், முதல் விஜயா நகர் பஸ் நிலையம் வரை, வெங்கடேஷ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர்.

    தி.நகர்: தணிக்காசலம் ரோடு, தியாகராய ரோடு, பனகல்பார்க், சுப்பிரமணிய விஜயராகவாச்சாரி தெரு, கிரியப்பா சாலை பகுதி, உஸ்மான்சாலை பகுதி, ராமசந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, இந்தி பிரசார சபா தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும்.
    • மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடா்ந்து இழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    தற்போதைய நிலவரப் படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத் துக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டது. இது தொடா்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயா்த்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆணையின் படி இந்த ஆண்டு ஜூலை மாதம் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயா்த்த வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 சதவீதம் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயா்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    'மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பம் இட்டிருப்பதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும். வழக்கம்போல வாரியத்தின் வரவு, செலவு விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

    இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. மின் கட்டண உயா்வு தொடா்பாக தமிழக அரசும் முடிவெடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது.
    • மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் இழப்புக்கான முதன்மைக் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அளவிலான மின்சார சந்தையில் இருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் இருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ.1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

    மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்து இருப்பது, மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், அதை சரி செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கும் கூடுதல் வரி விதிப்பது என தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தமிழக அரசு தொடுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.
    • 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் தொழிற்சாலை வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன.

    இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். 2 மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கும் போது பல வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் வந்து விடுகிறது.

    இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண் டும் என்பதற்காக ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதை கண்டறிவதற்காக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக் கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.

    தற்போது மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ அதை கண்டறிந்து நிறுத்துவதற்கு தற்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளை பெற்றிருந்தால் அதை ஒரே மீட்டராக கணக்கில் கொண்டு வருவதற்கு ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.

    மின் நுகர்வோர் இதை செய்ய தவறினால் மின் வாரியம் பொது பயன்பாடு கட்டணமாக யூனிட்க்கு 8 ரூபாய் கணக்கில் வசூலிக்க தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டில் ஒருவர் பெயரில் 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். இதற்காக தான் இப்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி மின் வாரிய ஊழியர்களால் நடத்தப்படுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

    • பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது52). மின்வாரிய அதிகாரி.

    இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் பொன்னகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை இருப்பு ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர்.

    காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சோதனை நடத்தி இவை எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

    • ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.

    ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.

    • மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
    • நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

    நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மரியா ஆரோக்கியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துங்கள்.

    ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்றவைகளுக்கு 3 பின் சாக்கெட் பிளக்குகளை பயன்படுத்துங்கள்.

    மின் கசிவு தடுப்பானை இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்துங்கள். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுங்கள். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை வயரிங்குகளை சோதனை செய்து மாற்றுங்கள். மின் கம்பங்கள், அவற்றின் ஸ்டே வயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீதும் கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.

    மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தலாகவும், விளம்பர பலகை கட்டவும் பயன்படுத்தக்கூடாது.

    மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மின் கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை மின்வாரிய அலுவலர்கள் உதவியுடன் அகற்ற வேண்டும். அவசர நேரத்தில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும்படி மின் கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.

    மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    இடி, மின்னலின் போது வெளியே இருக்காதீர்கள். கான்கிரீட், கூரை வீடுகளின் கீழ் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையலாம். குடிசை, மரங்களின் கீழ் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கக்கூடாது. மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    மேலும் மின் புகார்களை மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் அப் எண்: 94458 51912 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.
    • அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 30 நிமிட நேரம் கழித்துதான் மின்சாரம் வந்தது.

    இது திட்டமிட்ட சதி செயல் என்று அரசு மீது பா.ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் மின்தடை ஏற்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை. மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.

    ஒரு மாநிலத்திற்கு மிக முக்கிய வி.ஐ.பி. வரும்போது 24 மணிநேரமும் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். அதை கடைபிடித்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

    ஆனாலும் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.

    இது தொடர்பாக இப்போது அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் மணி வண்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகையின் போது அவர்கள் வந்து செல்லும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் முன் கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இதற்காக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
    • தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து நேற்று இரவு திருவட்டத்துறை, கொடிக்க ளம் கிராமமக்கள் விருத்தா சலம்- திட்டக்குடி சாலை யில் கொடிக்களம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடு பட்டிருந்த பொது மக்களி டம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெரில் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். விழுப்புரம் மாவட் டத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் அரகண்ட நல்லூரில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார பிரமுகர்களும் தொடர் மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் காரணம் கேட்கும் பொழுது ஏன் மின்வெட்டு ஏற்படுகின்றது என்கிற காரணம் எங்களுக்கே தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் பதில் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அறி விக்கப்படாத மின்வெட்டுக் கான காரணம் என்னதான் என புரியாமல் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.

    • கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
    • பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

    பல்லடம்:

    பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×