என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார வாரியம்"
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை 10.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
திருமுடிவாக்கம்: முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், மேலந்தை தெரு, பாலவராயன் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகநாதபுரம், பூஜா அவென்யூ, பாபு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
- மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன.
- அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர்.
இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான டெண்டர் தொடர்ந்து பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மின்துறையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எம்கேபி நகர்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலயன்புரி தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஏரியா, 100 அடி சாலையின் ஒரு பகுதி, அண்ணா நகர், Csir சாலை, காந்தி நகர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை மறுநாள் (03.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை.
அரும்பாக்கம்: மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரி.
அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.
சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.
கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3வது, 4வது தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அலமாதி: கீழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்ல பாக்கம், தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
செங்குன்றம்: சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க், பிஞ்சலா சுப்ரமணியம் தெரு, வெங்கடேசன் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, ஜி.என். செட்டி தெரு, சிங்காரவேலு தெரு, சிவப்பிரகாசம் தெரு, ராஜா தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராஜாபத்தர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபால கிருஷ்ணன் தெரு, விஜயராகவ சாலை, டாக்டர் நாயர் சாலை, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாச்சார் தெரு, பசுல்லா தெரு, கிரியப்பா சாலை, லோடிகன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு, கிரசென்ட் தெரு, சுந்தரம் தெரு, ராஜாம்பாள் தெரு, யோகம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ஹனுமந்த ராவ் தெரு, ராமராவ் தெரு, சீனிவாச சாலை, ராமச்சந்திரன் சாலை, சாம்பசிவம் தெரு, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்குப் போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசென்ட் தெரு, இந்தி பிரச்சார சபா தெரு
செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானேறு, நெற்குன்றம் கும்மனூர், அங்காடு, அருமந்தை.
பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், ஏஎஸ்ஆர் சிட்டி எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், சர்மா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
குன்றத்தூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், குன்றத்தூர் கோவில் வேவ் , போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், ஏஆர் எடைபாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
- போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் இருப்பதாக தகவல்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
3.30 லட்சம் மின் கம்பங்கள், 9,568 கி.மீ. மின் கம்பங்கள், 13,029 மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான அளவு மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் இருப்பதாகவும் மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன்கோவில், கூனிபஜார், லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (29.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருச்சி:
வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், ம.குரும்பப்பட்டி, வலையபட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, பி.குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னனியாறுடேம் ஆகிய பகுதிகள்.
இதேபோல் திருச்சி கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டித்தெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளிதெரு, மத்திய பஸ்நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, எஸ்.பி.ஐ. காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன்சாலை, புத்தூர், அருணாதியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, சோனாமீனா தியேட்டர், கோர்ட்டு பகுதி, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன்கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ்சாலை, லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன்காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர்சாலை, பாரதிநகர் ஆகிய இடங்கள்.
கோவை:
கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில், என்.எஸ்.ஆர். ரோடு, பாரதி பார்க் 1, 2, 3 வீதிகள், ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான் பகதூர் ரோடு பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ், ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்த காலனி, ஹட்கோ காலனி, அலமு நகர் ஆகிய இடங்கள்.
திண்டுக்கல்:
பழனி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பழனி டவுன், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், தும்பலப்பட்டி, புளியம்பட்டி, பாறைப்பட்டி, கே.ஜி.வலசு, சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகள்.
இதேபோல் கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, கீழ் மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, ஊத்து, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கடைசிக்காடு ஆகிய பகுதிகள்.
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தேனாம்பேட்டை: போஸ் கார்டன், T.V. சாலை, ஜெயம்மால் சாலை, இளங்கோ சாலை, போஸ் சாலை பகுதிகள், ராஜாகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தம்மாள் காலனி பகுதிகள், K.B. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்புதுரை தெரு, T.T.K. சாலை, கதீட்ரல் சாலை, J.J.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், K.R. சாலை பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, S.S.I. சாலை, H.D. ராஜா தெரு, A.R.K. காலனி, அண்ணா சாலை (பகுதி), வீனஸ் காலனி மற்றும் முர்ரேஸ் கேட் சாலை பகுதிகள்.
மீஞ்சூர் : மீஞ்சூர் நகரம், TH சாலை, சிறுவாக்கம், சூர்யா நகர், BDO அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமவரம், R-R பாளையம் அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டா மந்திரம், வல்லூர், அத்திப்பட்டு, S.R. பாளையம், G.R. பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம்.
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.
- இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
- இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான கனிய முதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மின்துறை அனைத்து வீடுகளின் மின் மீட்டர்களை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோகத்துறை திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுமுற்றிலும் இலவசம். இந்த ஸ்மார்ட் மீட்டர்களால் மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
நுகர்வோர் தங்களின் தினசரி மின் பயன்பாட்டை செல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும் வசதி உள்ளது.
எனவே பொதுமக்கள் புகார் அளிக்க அவசியமில்லை. மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி 'போஸ்டு பெய்டு' கட்டணம் முறையே தொடரும்.
முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட வீடுகள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டாளர்களுக்கு பொருத்தப்படுகின்றது. புதிய மின் இணைப்பு பெறுவோர் மற்றும் விருப்பமுள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 சதவீதம் நுகர்வோர்களின் வீட்டில் 3 மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






