search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank officer"

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும்.
    • கரென்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம்.

    திருப்பூர் :

    2000ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறும்அறிவிப்பு வெளியானதில் இருந்து பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், மருந்துக்கடைகளில் இந்நோட்டுக்களை பெற்று க்கொள்ளாமல் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து ள்ளதால் இந்நோட்டுக்களை மக்கள்அதுவரை பயன்படுத்தலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே இந்நோட்டுகளை பெற்றுக்கொள்ளாமல் வர்த்தகர்களும், வியாபாரிகளும் மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாயை பெற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் நோட்டு க்களை மட்டும் பெற்றுக்கொ ள்கின்றனர்.அதே போல் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள், மொத்த மளிகை வியாபாரிகள், மருந்துக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெற்றுக்கொள்வதில்லை. இதனால் இருக்கும் பணத்தை தேவைக்கு கூட செலவிட முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று வாடி க்கையாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வர்த்தக ரீதியான கரென்ட் அக்கவு ன்ட் வைத்திரு ப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். எந்த விளக்கமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனாலும் பலர் இந்த விழிப்புணர்வு இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ள மறுப்பது தவறு. வியாபாரிகள், வர்த்த கர்கள் மக்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். அப்பணத்தை வங்கியிலும் செலுத்தலாம். எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

    • பெண்ணின் பணத்தை டெபாசிட் செய்யாமல் ஏமாற்றி வங்கி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வங்கிக்கு நித்தியா என்ற ஒரு பெண்மணி ரூ. 25 ஆயிரம் டெபாசிட் செலுத்துவதற்காக வந்தார்.

    திருச்சி,

    திருச்சி மேலப்புலி வார்டு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் மேலாளராக பணியாற்றி வருபவர் லதா (வயது 40). அதே வங்கியில் தொழில் வளர்ச்சி துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தமிழரசன் (28). இந்த வங்கிக்கு நித்தியா என்ற ஒரு பெண்மணி ரூ. 25 ஆயிரம் டெபாசிட் செலுத்துவதற்காக வந்தார்.

    பின்னர் அந்தத் தொகையை அங்கிருந்த அதிகாரி தமிழரசனை அணுகி டெபாசிட்டில் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் பணத்தை நித்யாவின் வங்கி கணக்கில் செலுத்தாமல் அவரை ஏமாற்றியுள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் லதா கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ITRaids
    வேலூர்:

    காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரி சோதனை நடந்தது. அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


    மேலும் தி.மு.க. பிரமுகர் வீடுகளில் கட்டு கட்டாக பணம் ரூ.11 கோடியே 48 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன், ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரி சோதனை நடந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    காட்பாடி காந்திநகர் 7-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் தியாகராஜன். கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இன்று மதியம் 12.50 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக புகுந்தனர். அங்கு சோதனை நடத்தினர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ITRaids
    திருச்சி செந்தில்குமார், கீழவாளாடி செந்தில்குமார் இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard
    திருச்சி:

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.



    அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.  #Pancard

    ×