search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shocked"

    • பார்சலை திறந்து பார்க்கையில் அதில் மண்டை ஓடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை திருவையாறு போலீசார் அழைத்து சென்று விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். ஜமாத் தலைவர் .

    இவருக்கு கடந்த 3-ந்தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப்பெட்டியில் இருந்தது.

    அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தார். அப்போது அதில் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து திருவையாறு போலீசில் முகமதுகாசிம் புகார் செய்தார். அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டை ஓடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த 2 வாலிபர்களை இன்று திருவையாறு போலீசார் சந்தேகத்தின் பேரில் திருவையாறு போலீஸ் நிலையத்தி ற்கு அழைத்து சென்றனர்.

    அங்குவைத்து 2 வாலிபரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தான் அந்த பார்சலை அனுப்பினார்களா? முன்விரோதம் காரணமாக அனுப்பப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டு அவகாசத்துக்குள் திருப்பி செலுத்திவிட்டு அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மறு சாகுபடிக்கான கடனை பெற்று வருகின்றனர். தற்போது பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    இம்முறை பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை முடிவதற்குள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இல்லாவிட்டால் வட்டி சுமை ஏற்படும். விவசாயிகளின் வீடு ஒரு கிராமத்தில் இருக்கும். விளை நிலம் மற்ற கிராமங்களில் இருக்கும்.வீடு இருக்கும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திலேயே பயிர்க்கடன் பெற்று வந்தனர். இனிமேல் விளைநிலம் உள்ள கிராமத்தில் தான் பயிர்க்கடன் பெற வேண்டும் என்கின்றனர். இது பல்வேறு பாதிப்புகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே, பழைய முறைப்படி கூட்டுறவுக்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில்,கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் அரசுக்கு பல்வேறு சவால்களும், நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்காகவே பழைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன என்றார்.

    திருச்சி செந்தில்குமார், கீழவாளாடி செந்தில்குமார் இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard
    திருச்சி:

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.



    அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.  #Pancard

    என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். #CBI #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

    இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ஆர்த்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வசதி கொண்ட அறை ஒதுக்கீடு தொடர்பாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்தார்.
     
    பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    இந்த தீர்ப்பு வெளியானதும் லண்டனில் உள்ள கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லையா, 'இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக எனது வழக்கறிஞர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அளிப்பார்கள். 

    அதன் அடிப்படையில் அடுத்த செயல்பாடு தொடர்பான முடிவை எடுப்பேன். இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று அளிக்கப்பட்டுள்ள நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த 28 நாட்களுக்குள் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
    டாஸ்மாக் மதுபாட்டிலில் நத்தை கிடந்ததால் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் இருந்து கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று மதியம் கடை திறந்த சிறிது நேரத்தில் அரியலூரை சேர்ந்த தொழிலாளியான அய்யப்பன் (வயது 40) என்பவர் மது பாட்டில் ஒன்று வாங்கினார். இதனையடுத்து அவர் வாங்கிய பாட்டிலில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்று பாட்டிலை பார்த்தார். .

    அப்போது அந்த மதுபாட்டில் உள்ளே நத்தை ஒன்று செத்து கிடந்ததை கண்ட அய்யப்பன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நத்தை செத்து கிடந்த மது பாட்டிலை காண்பித்து அய்யப்பன் முறையிட்டார். அப்போது ஊழியர்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து, அங்கு மதுபாட்டில்கள் வாங்க வந்த மற்றவர்களும் இதுகுறித்து கேட்டனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அய்யப்பன் அந்த மதுபாட்டிலுடன், அதனை வாங்கியதற்கான ரசீதை ஊழியர்களிடம் வாங்கி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். மதுபாட்டிலில் நத்தை செத்து கிடந்தது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    ×