search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK court"

    லண்டனில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #NiravModi #UKCourt
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர்.

    இந்தநிலையில் இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அங்கு புதிதாக வைர வியாபாரம் செய்வதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

    ஏற்கனவே இவரை நாடுகடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

    தற்போது அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

    நிரவ் மோடியை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்கும்படி லண்டன் கோர்ட்டில் இந்தியா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    அப்போது அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார். மாறாக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ்மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #NiravModi #UKCourt

    பிரிட்டன் நாட்டில் இருக்கும் விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

    இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து  இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த பத்தாம் தேதி  தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவரை நாடு கடத்தும் உத்தரவு பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோர்ட்டின் உத்தரவுக்கு சாதகமாகவே முடிவுகள் எடுக்கப்படும் என்னும் நிலையில் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும்.

    இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

    இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா  மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் ஆனந்த் டூபே இன்று தெரிவித்துள்ளார். அப்படி செய்யப்படும் மேல்முறையீட்டை நிராகரிக்கவோ, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவோ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு.

    அப்படி மேல்முறையீடு வழக்கு நடத்தப்பட்டால் இந்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt #extraditionverdict #Mallyaextradition 
    என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். #CBI #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

    இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ஆர்த்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வசதி கொண்ட அறை ஒதுக்கீடு தொடர்பாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்தார்.
     
    பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    இந்த தீர்ப்பு வெளியானதும் லண்டனில் உள்ள கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லையா, 'இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக எனது வழக்கறிஞர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அளிப்பார்கள். 

    அதன் அடிப்படையில் அடுத்த செயல்பாடு தொடர்பான முடிவை எடுப்பேன். இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று அளிக்கப்பட்டுள்ள நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த 28 நாட்களுக்குள் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
    பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது இன்று தெரியும். #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார்.

    அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

    இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.



    இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.

    இங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.

    அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

    கிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.

    மேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர்.

    இப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர்வாதங்கள் நடைபெற்றன.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்.

    அப்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றிய தனது தீர்ப்பை மாஜிஸ்திரேட்டு வழங்குகிறார். அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டால், இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு.

    அதேபோன்று நாடு கடத்த தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் அந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்வதற்கும் அதே 14 நாட்கள் அவகாசம் இருக்கிறது.

    ஆனால் நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார்.

    விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது. அந்தச் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

    இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘விஜய் மல்லையாவுக்கு டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும்; சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி செய்து தரப்படும்’’ என கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    தீர்ப்பு வரவுள்ள நிலையில் விஜய் மல்லையா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், ‘‘நான் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கவில்லை. கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் கடன் வாங்கியது. வர்த்தக தோல்வியினால் பண இழப்பு ஏற்பட்டது. உத்தரவாதம் அளித்தவர் மோசடி பேர்வழி அல்ல’’ என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #VijayMallyaextradition
    வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya

    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.

    கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.

    விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.

     


    நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.

    மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.

    ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.

    என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

    விஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளித்துள்ளது. #VijayMallya #CBI

    புதுடெல்லி:

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.

    எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ‘லுக்அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி லண்டனில் இருந்து நாடு திரும்பினார். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த போதும் அவரை சி.பி.ஐ. கைது செய்யவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் லுக் அவுட் நோட்டீசு திருத்தம் செய்யப்பட்டது.

     


    அதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மல்லையா அதே ஆண்டு நவம்பர் 21-ந்தேதி வழக்கு விசாரணையில் ஆஜராக நாடுதிரும்பினார். பின்னர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

    வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது அவர் பாராளுமன்ற மேல்- சபையின் எம்.பி.யாக இருந்தார். எனவே தேடப்படும் நபராக அறிவித்த போதும் அவரை கைது செய்ய சட்ட ரீதியான போதிய காரணங்கள் இல்லை. அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    இந்தநிலையில் அவரை கைது செய்ய வசதியாக லுக் அவுட் நோட்டீசு திருத்தப்பட்டது. அதன் மூலம் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தகவலை குடியுரிமை துறை சி.பி.ஐ.க்கு தெரிவிக்க வேண்டும் என்ற திருத்தம் வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. #VijayMallya #CBI 

    விஜய் மல்லையாவுக்கு மும்பை ஜெயிலில் டி.வி., காற்றோட்ட வசதி கொண்ட அறை ஒதுக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ வீடியோ தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #UKCourt #CBI
    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். ஆனால் அங்குள்ள சிறைகளில் போதிய வசதி கிடையாது. அவர் மோசமாக நடத்தப்படுவார் என விஜய் மல்லையாவின் வக்கீல் வெஸட் மினிஸ்டர் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து இந்திய சிறைச்சாலையின் தன்மை குறித்தும், அதில் உள்ள வசதிகள் குறித்தும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள ஜெயிலில் அறை எண் 12-ல் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டனர். அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்திய சிறைகளில் சுகாதார வசதி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அறிய இங்கிலாந்து கோர்ட்டு விரும்பியது.

    இந்திய சிறைகள் சுகாதாரமாக இருக்கிறது என்ற ஆதாரத்துக்காக அந்த வீடியோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் சிறை கிழக்கு பார்த்து உள்ளது. இதனால் அங்கு சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “சிறை அறையில் எதிர் எதிராக ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் இடவசதி உள்ளது. எனவே அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தவித தடையும் இருக்காது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். #VijayMallya #UKCourt #CBI
    சொத்துகளை முடக்கம் செய்வது குறித்து இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். #VijayMallya #UKCourt
    லண்டன்:

    இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

    இது தொடர்பாக இந்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டு, அந்த நாட்டில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க கோரி இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.  #VijayMallya  #Tamilnews
    இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.

    மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

    சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், கடந்த மாதம் 8-ந் தேதி, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டார். விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்தார்.

    இந்நிலையில், இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நேற்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரும் வழக்கின் இறுதி விசாரணைக்காக, அவர் அடுத்த மாதம் 31-ந் தேதி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகிறார். #VijayMallya
    ×