என் மலர்
நீங்கள் தேடியது "appeal"
- மக்கள் திட்டப்பணிகளை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் நகர்மன்றத்தலைவர் செஹனாஸ் ஆபிதா வாழ்த்து தெரிவித்தார். துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் பேசிய தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவ டைந்துள்ளது. மக்கள் கோரி க்கைகளை நிறைவேற்ற எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கீழக்கரை பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று ஆதரவு தந்து கீழக்கரை மக்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் குறைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுவதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கீழக்கரை நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, கீழக்கரை வட்டாட்சியர் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
நகர் பகுதியில் மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தேவையான பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார்.
கவுன்சிலர் சுகைபு:- கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு தனி நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அரசு மருத்துவமனையில் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது காசிம்:- 14-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்காத நிலை உள்ளது. உடனடியாக மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் வீடு வீடாகச்சென்று வரி வசூல் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
சப்ராஸ் நவாஸ்: ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியவில்லை. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மேற்பார்வை யாளர்கள் சம்பாசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவ லர்கள் தமிழ்ச் செல்வன், உதயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வழக்கில் இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக காவல்துறையில் சிறப்பான அதிகாரிகள் இருக்கும்போது, இந்த வழக்கு ஏன் சிபிஐக்கு மாற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதில், பொன் மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். #PonManickavel #IdolWing
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பளித்தார். செல்லாது என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வெளியிட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து 18 தொகுதிகளையும் காலி இடமாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மதுரையில் கூடி ஆலோசித்தனர். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் நேற்று அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா? என்று ஆய்வு செய்தனர். அப்பீல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது. என்றாலும் அதற்கு முன்னதாக அப்பீல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களான கபில் சிபில், அசோக் சிங்வி ஆகியோரை தொடர்பு கொண்டு எங்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் வாதாட ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படும்.
ஏற்கனவே 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 650 பக்கம் உள்ளது. இப்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பு 450 பக்கம் உள்ளது. இவற்றை டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சபாநாயகரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம். இதில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைத்தது. அதேபோல் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால்தான் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே சொன்ன 2 நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரி என்று பார்த்துதான் தீர்ப்பு கூற வேண்டும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பு கூறி உள்ளார். இது விதியை மீறியதாகும்.
இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடுவோம். நாங்கள் மேல்முறையீடு செய்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராகவே உள்ளோம்.
தினகரனை ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உள்ளதாக கேள்விப்படுகிறோம். இவர்கள் 3 பேர் மீதும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வளவு ஏன்? எங்கள் 18 பேரையும் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் நீக்க முடியாமல்தான் உள்ளனர். தைரியம் இருந்தால் நீக்கிப் பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #SupremeCourt
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும். அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர். மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 18 பேரும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். #18MLAsDisqualification #TTVDhinakaran #18MLAsAppeal

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்னும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவு இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வுக்கு எதிரானவை. எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார். #Mullaperiyardam #TNGovernment
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.
இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.
இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.
என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.
ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin