என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாளை அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மதுரையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மக்கள் மீது சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தி.மு.க. அரசின் இத்தகைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், உடனடியாக விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் அதி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட அதி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை பெத்தானியாபுரம் திடலில் நடைபெறுகிறது.
இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்