என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mallya
நீங்கள் தேடியது "mallya"
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. #vijaymallya
லண்டன்:
‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62). இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது. #vijaymallya
கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
ஜெய்ப்பூர்:
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.

இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
பிரிட்டன் நாட்டில் இருக்கும் விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt
லண்டன்:
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.
இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த பத்தாம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரை நாடு கடத்தும் உத்தரவு பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோர்ட்டின் உத்தரவுக்கு சாதகமாகவே முடிவுகள் எடுக்கப்படும் என்னும் நிலையில் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் ஆனந்த் டூபே இன்று தெரிவித்துள்ளார். அப்படி செய்யப்படும் மேல்முறையீட்டை நிராகரிக்கவோ, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவோ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு.
அப்படி மேல்முறையீடு வழக்கு நடத்தப்பட்டால் இந்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt #extraditionverdict #Mallyaextradition
மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
புதுடெல்லி:
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விஜய் மல்லையா, “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2015-ம் ஆண்டு பாராளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்து தாம் லண்டனுக்கு தப்புவது குறித்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், விஜய் மல்லையா மீது இருந்த லுக் அவுட் நோட்டீஸ் தளர்க்கப்பட்டு, 54 பரிசோதிக்கப்பட்ட பயண பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் விஜய் மல்லையவை தாம் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில், அருண் ஜெட்லியிடம் லண்டனுக்கு தப்புவது குறித்து சொல்லிவிட்டுதான் சென்றார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விஜய் மல்லையா, “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் ஜெட்லி, 2014-ம் ஆண்டு முதல் தாம் விஜய் மல்லையாவை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2015-ம் ஆண்டு பாராளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்து தாம் லண்டனுக்கு தப்புவது குறித்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், விஜய் மல்லையா மீது இருந்த லுக் அவுட் நோட்டீஸ் தளர்க்கப்பட்டு, 54 பரிசோதிக்கப்பட்ட பயண பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் விஜய் மல்லையவை தாம் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில், அருண் ஜெட்லியிடம் லண்டனுக்கு தப்புவது குறித்து சொல்லிவிட்டுதான் சென்றார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
புதுடெல்லி:
நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
இந்திய வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya
மும்பை:
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2005-10-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6,027 கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக இந்திய வங்கிகள் குழுமம் சார்பில் மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் பொருளாதாரத்துறை அமலாக்க அதிகாரிகள் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைட்டட் பிரிவரீஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிக்கு இவ்வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத உத்தரவையும் பிறப்பித்துடன், மறுவிசாரணையை ஜூலை மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
