search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christian Michel"

    • ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கான பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில் தான் கைது செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் தான். அந்த வகையில், இந்த வழக்கில் தான் இதுவரை ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும் முன்பே ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    புதுடெல்லி:

    ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


    ஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு  செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
     
    இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  11-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் தன்னை மிரட்டியதாக வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி கோர்ட்டில் இன்று தெரிவித்தார். #RakeshAsthana #ChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
     
    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    திகார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கிறிஸ்டியன் மைக்கேலை காஷ்மீர் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அடைத்துள்ளதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், திகார் சிறையில் இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேலிடம் சிறைக்கு சென்று மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறையில்படும்  அவதிகள் தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார்.



    காஷ்மீரில் கைதான பத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்களுடன் என்னை ஒரே அறைக்குள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், எனக்கு அடுத்த அறையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ளார். பல கொலைகளை செய்த இதைப்போன்ற கொடுங்குற்றவாளிகளுடன் என்னை எதற்காக அடைத்து வைத்துள்ளனர்? என்பது புரியவில்லை.

    சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை சந்தித்து ‘உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்’ என்று மிரட்டி இருந்தார். தற்போது திகார் சிறையில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதன் அர்த்தம் புரிகிறது என மைக்கேல் வாக்குமூலம் அளித்தார்.

    இதைதொடர்ந்து, எந்த சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கிறிஸ்டியன் மைக்கேல் மாற்றப்பட்டார்? என்பது தொடர்பாக சிறையில் உள்ள வீடியோ பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, திகார் சிறைக்குள் நாளையும், நாளை மறுநாளும் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் மைக்கேல் கிறிஸ்டியனிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    திகார் சிறை அதிகாரி முன்னிலையில் நடத்தப்படும் இந்த விசாரணையின்போது மைக்கேல் கிறிஸ்டியனின் வழக்கறிஞரும் உடன் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #RakeshAsthana #RakeshAsthanathreatened #ChristianMichel
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #VVIPChopper #Delhicourt #ChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    துபாயில் இருந்த அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த இருமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை ஜாமினில் விடுவிக்கக்கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார்.



    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை ஜாமினில் விடுதலை செய்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார். எனவே அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து,கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் இன்று இன்று தள்ளுபடி செய்தார். #VVIPChopper #Delhicourt #ChristianMichel #Michelbailplea
    கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ஜெய்ப்பூர்:

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.



    இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியின் பெயரை இடைத்தரகர் வெளியிட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார். #Chidambaram #ChristianMichel #SoniaGandhi
    புதுடெல்லி:

    நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தப் பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்தப் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல், “என்னிடம் விசாரணையின்போது, சோனியா காந்தி பற்றி கேள்வி எழுப்பினால், அதை நான் எப்படி எதிர்கொண்டு பதில் அளிக்க வேண்டும்?” என்று தனது வக்கீல்களிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளார்.

    இந்த தகவலை டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை வெளியிட்டது. இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், ஊடகங்களும் தங்கள் வழியை கொண்டுள்ளன என்கிறபோது, இந்தியாவில் வழக்குகளின் விசாரணை, டெலிவிஷன் சானல்களில்தான் நடைபெறும். குற்றவியல் நடைமுறைச்சட்டமும், சாட்சிய சட்டமும் பொருந்தாது.

    அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் என்ன சொல்கிறதோ அது வாய்வழி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் எந்தவொரு துண்டுக்காகிதத்தை அளித்தாலும் அது சான்று ஆவணமாக கொள்ளப்படும். டி.வி.சானல்கள் என்ன சொல்கின்றனவோ, அவை தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.  #Chidambaram #ChristianMichel #SoniaGandhi 
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
     
    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையே, கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



    அதன்பின், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5-ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.  கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து 3 முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, மைக்கேலிடம் விசாரிக்க அனுமதிக்குமாறு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் முறையீடு செய்தனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 22-ம் தேதி அனுமதித்தது.

    அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேலை மேலும் 7 நாள் விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார். #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel 
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதித்தது. #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். பின்னர், அவர் ஒருவார காலம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மைக்கேல் தனக்கு சிறையில் சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சிறை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    அந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என மைக்கேல் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் ஆஜரான பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேல் தொடர்பான வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவரிடம் விசாரிப்பதற்காக 15 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார். #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel 
    இந்திய அரசியல் பிரமுகர்களுக்கு அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கித் தந்ததாக கைதான வெளிநாட்டு இடைத்தரகருக்கு 9 நாள் காவல் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #ChristianMichel
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடன் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இந்த கெடு முடிவடைந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் 15-ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது சார்பில் அல்ஜோ ஜோசப் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ரோஸ்மேரி பாட்ரிசி ஆகியோர் ஆஜராகினர். ஏற்கனவே, இந்த ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களில் மைக்கேல் கிறிஸ்டியனுக்காக ஆஜரான தன்னிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும் அதை சி.பி.ஐ. கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் ரோஸ்மேரி பாட்ரிசி கேட்டு கொண்டார்.



    இதைதொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கு இணங்க கிறிஸ்டியன் மைக்கேலின் விசாரணை காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை காவலின்போது அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் ரோஸ்மேரியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

    இந்த விசாரணை காவலும் இன்றுடன் முடிந்த நிலையில் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்குமாறு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், மைக்கேல் கிறிஸ்டியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI #Micheljudicialcustody
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சி.பி.ஐ. விசாரணை காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில்  துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இந்த கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது சார்பில் அல்ஜோ ஜோசப் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ரோஸ்மேரி பாட்ரிசி ஆகியோர் ஆஜராகினர். ஏற்கனவே, இந்த ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களில் மைக்கேல் கிறிஸ்டியனுக்காக ஆஜரான தன்னிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும் அதை சி.பி.ஐ. கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் ரோஸ்மேரி பாட்ரிசி கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கு இணங்க கிறிஸ்டியன் மைக்கேலின் விசாரணை காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை காவலின்போது அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் ரோஸ்மேரியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சி.பி.ஐ. விசாரணை காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.



    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழலில் இந்தியர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், அவரை தங்களிடம் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் இன்றுடன் முடிவடைவதால் கிறிஸ்டியன் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடன் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    மேலும், மைக்கேலை அவரது வழக்கறிஞர் காலை அரை மணி நேரமும் மாலையில் அரை மணி நேரமும் சந்தித்து பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #ChristianMichel,#AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறிய வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் விசாரணை காவல் விதிக்கப்பட்டுள்ளது. #AgustaWestlandscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம்  நேற்றிரவு அவர் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.



    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த ஊழலில் இந்தியர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

    அதனால், அவரை தங்களிடம் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார்.

    இதற்கிடையில், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த அவரது வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தேவைப்பட்டால் நீதிமன்ற காவலில் வைக்கலாம் என்ற அவரது கருத்தை நிராகரித்த நீதிபதி, கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
     #ChristianJamesMichel,#AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    ×