search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி"

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர்களுடன் வங்கி மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரிக் உரிமை யாளர்கள், வங்கி மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். 

    திருப்பூர் டெக் மாவட்ட தலைவர் திருமூர்த்தி, ஈரோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியம், திருச்செங்கோடு சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, உதவி செயலாளர் முருகவேல், பொருளாளர் ஜெயக்குமார், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் வங்கிகள் சார்பில் சுந்தரம் பைனான்ஸ் கண்ணன், கனரா வங்கி மேலாளர் அகிலா, இந்தியன் வங்கி பிரசன்னா, எஸ் பேங்க் நித்திஷ் குமார், ஆக்சிஸ் பேங்க் சித்திக், கனரா வங்கி முன்னாள் மேலாளர் தனசேகர், கரூர் வைஸ்யா பேங்க் மேலாளர் சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சரவணன், யூனியன் பேங்க் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ரிக் உரிமையாளர்கள் செல்வராஜ், தனபால், விஜியகுமார், முருகேசன், சக்திவேல் ஆகியோர் பேசுகையில், கொரோனா  மற்றும் டீசல் விலை உயர்வு, தொடர் மழைக்காலம் போன்றவற்றால் எங்களது தொழில் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்படுவதால் கூலி கொடுக்கவே முடியாத நிலை உள்ளது. இதனை காரணம் காட்டி கடனை கட்ட மறுக்கவில்லை. எங்களது இ.எம்.ஐ. தொகையை பாதியாக குறைத்து கட்டவும், வரும் தொடர் மழைக் காலத்தை ஒட்டி 6 மாதம் தவணை கட்ட கால அவகாசம் தரும்படியும் கோரிக்கை வைத்தனர். 

    மேலும் வண்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்து பேசிய வங்கி தரப்பினர் சங்கத்தின் மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் எங்கள் மேலதிகாரிகளுக்கு சொல்லி எங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறோம்.என கூறினார்கள். 

    கூட்டத்தில் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கிகளுக்கும் மனு கொடுத்தனர்.
    கஞ்சா வழக்கில் கைதானவா்களின் 43 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்தனர்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில்  2020-ம் ஆண்டு முதல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை கஞ்சா விற்ற வழக்கில் கைதானவா்களில் 21 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 50 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி 80 போ் வரை கஞ்சா விற்றதாக கைதாகி உள்ளனா். அவா்களின் 43 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கஞ்சா வழக்கில் கைதானவா்களில் 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டோரின் அசையும், அசையா சொத்துகளையும் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்கும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×