search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகள் ஆதாரை மட்டுமே ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் - மத்திய அரசு
    X

    வங்கிகள் ஆதாரை மட்டுமே ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் - மத்திய அரசு

    செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernment #AadharCard
    புதுடெல்லி:

    ஆதார் எண்கள் முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்தது.

    மேலும் ஆதார் அட்டைகளை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

    என்றாலும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து செல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக நேற்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



    மேலும் விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன.

    மேலும் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #CentralGovernment #AadharCard
    Next Story
    ×