search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone Service"

    • குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.
    • இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் குன்றி மற்றும் கூத்தம்பாளையம் என ஊராட்சிகளில் சின்ன குன்றி, பெரியகுன்றி, கிளமன்ஸ் தொட்டி, மாகாளி தொட்டி, அணில் நத்தம் பண்ணையத்தூர், கோவிலூர், ஆனந்த நகர், கீழுர், கோம்பை தொட்டி, கோம்பையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு ெதாலை தொடர்பு வசதி இல்லாததால் செல்போன் சேவை இன்றி மலை கிராம மக்கள் பரிதவித்து வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு குன்றி பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது நாட்களே செயல்பட்ட அந்த டவர் மீண்டும் செயல்பாடு இன்றி இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

    சில வாரங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனம் மூலம் குன்றி பகுதியில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது.

    இந்த செல்போன் கோபுரம் கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இயங்க தொடங்கியது.

    இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    இதனால் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் அப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் ரூ. 86.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குத்தியாலத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernment #AadharCard
    புதுடெல்லி:

    ஆதார் எண்கள் முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்தது.

    மேலும் ஆதார் அட்டைகளை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

    என்றாலும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து செல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக நேற்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



    மேலும் விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன.

    மேலும் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #CentralGovernment #AadharCard
    ×