search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank officers"

    பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார். அந்த பதிலில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த தவறின் அடிப்படையில் மேற்படி அதிகாரிகளுக்கு குறைந்த அபராதம் முதல் பெரிய அளவிலான அபராதம் வரை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அருண் ஜெட்லி, வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley
    வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளன. #BankStrike
    சென்னை:

    அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வங்கி மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் கையில் தான் பணம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அவர்கள் வந்தால்தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியும்.

    அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.

    வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னையில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் அதிகாரிகள் ஸ்டிரைக்கால் செயல்படவில்லை. நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில்செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. பெரிய அளவிலான தொகை எடுக்க முடியாமல் வர்த்தக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே நேரத்தில் அனைத்து தனியார் வங்கிகளும் இன்று செயல்பட்டன. தனியார் வங்கிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. காசோலை பரிமாற்றம், டி.டி. எடுத்தல் போன்ற பணிகள் எவ்வித கணக்கமும் இல்லாமல் நடைபெற்றது.


    புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி

    தேசிய வங்கிகளான ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி., பெடரல் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் சேவை முடங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை கிடைக்காது என்பதால் மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    24-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். அதனை தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி கிறிஸ்துமஸ், 26-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர் விடுமுறை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கும். #BankStrike

    புதிய கார்டுகள் வழங்கப்படுவதால், ‘சிப்’ பொருத்தப்படாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழந்துவிடாது என்றும், தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். #ATMCard
    சென்னை:

    முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் பலருடைய பாக்கெட்டுகளையும் வண்ண, வண்ண கலரிலான ஏ.டி.எம். டெபிட், கிரெடிட் கார்டுகள் அலங்கரித்து வருவதை பார்க்கமுடிகிறது.

    முன்பு உள்ள ஏ.டி.எம். கார்டுகளில் ரகசிய குறியீட்டு எண் (4 இலக்க பாஸ்வேர்ட்) இல்லாமல் மற்றொருவர் பணம் எடுத்து மோசடி செய்யும் நிலை இருந்தது. இதனால் அந்த ஏ.டி.எம். கார்டுகள் பாதுகாப்பு இல்லாததாக வங்கிகள் கருதின. இதையடுத்து புதிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ‘சிப்’ பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


    பழைய ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டுகளை வங்கிகள் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ‘சிப்’ பொருத்தப்படாத ஏற்கனவே இருக்கும் பழைய ஏ.டி.எம். கார்டுகள் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) முதல் செயல் இழந்துவிடும் என்று தகவல் பரவியது. இதனை வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    மேலும் படிப்படியாக புதிய தொழில்நுட்பத்துக்கு ஏ.டி.எம். கார்டுகள் மாற்றப்பட்டு வருவதாகவும், பழைய ஏ.டி.எம். கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  #ATMCard
    ×