என் மலர்
நீங்கள் தேடியது "வங்கி சேவை"
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
- வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், வங்கித் துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
எந்தவொரு நெருக்கடி அல்லது அசாதாரண சூழ்நிலையை கையாளும் வகையில் அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டும்.
குடிமக்களுக்கும், வணிக நிறுவங்களுக்கும் வங்கி மற்றும் நிதி சேவைகள் எந்த இடையூறும் இன்றி தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருக்க வேண்டும்.
யு.பி.ஐ. மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர வேண்டும்.
அசாதாரண சூழல்களை சமாளிப்பது குறித்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை ஒத்திகை செய்து பார்க்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைப்புகளுடன் வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வங்கி மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் கையில் தான் பணம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அவர்கள் வந்தால்தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியும்.
அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.
வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் அதிகாரிகள் ஸ்டிரைக்கால் செயல்படவில்லை. நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில்செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. பெரிய அளவிலான தொகை எடுக்க முடியாமல் வர்த்தக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை கிடைக்காது என்பதால் மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.
24-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். அதனை தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி கிறிஸ்துமஸ், 26-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர் விடுமுறை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கும். #BankStrike
குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.
கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.