search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank Service"

    விடுமுறை முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (21-12-2018) அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.  விடுமுறைகள் முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு இன்று வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

    பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


     
    தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். #BankStrike

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.

    22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. 



    26-ந் தேதி புதன்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் 5 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike #BankHolidays
    சென்னை:

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை, (டிசம்பர் 21) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாரத்தின் 4-வது சனிக்கிழமை (22-ந்தேதி) வங்கி விடுமுறையாகும். மறுநாள் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும்.

    24-ந்தேதி மட்டும் வங்கி செயல்படும். மறுநாள் 25-ந்தேதி (செவ்வாய்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறையாகும். 26-ந்தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆதலால் 26-ந்தேதி (புதன்கிழமை) வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றும் வங்கி சேவை பாதிக்கக்கூடும்.


    நாளை 21-தேதி முதல் 26-ந்தேதி வரை இடையில் 24-ந்தேதி ஒருநாள் தவிர 5 நாட்களும் பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை, பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் கடும் பாதிப்பை சந்திக்க கூடும்

    ஆனால் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு, 3 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் இன்று மாலைக்குள் ஏ.டி.எம்.களில் பணம் முழுமையாக நிரப்பப்படுகின்றன.

    24-ந்தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படுவதால் அன்று அனைத்து சேவைகளும் முழுமையாக கிடைக்கும். ஏ.டி.எம். மையங்களில் மீண்டும் பணத்தை நிரப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். #BankStrike #BankHolidays
    ×