search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banking service"

    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை இன்று(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கி சேவை முதல் கட்டமாக நாடு முழுவதும் 650 கிளைகளில் தொடங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 தலைமை தபால் நிலையங்கள், 79 துணை தபால் நிலையங்கள், 232 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள மானாமதுரை, ராஜகம்பீரம், மேலப்பிடாவூர், சவேரியார்பட்டிணம் மற்றும் செய்களத்தூர் ஆகிய 5 இடங்களில் புதிய வங்கி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

    இந்த வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இருந்தால் போதும். குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவை இல்லை. அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கேற்ப 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் சிறு,குறு தொழில் உள்பட எந்த ஒரு தொழிலுக்கும் நடப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    இந்த வங்கி சேவை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கியூ.ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக செயல்படுத்தப்படும். மேலும் அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வங்கி சேவை அளிப்பார்கள். மேலும் இந்தியாவின் எந்தவொரு வங்கி கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.

    இதுதவிர மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், காப்பீடு பிரீமியம் தொகை போன்ற பல்வேறு சேவைகளுக்கு இந்த வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்த முடியும்.

    அஞ்சல்துறையின் அனைத்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு தங்களுடைய கணக்கின் மூலம் எளியமுறையில் பணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த வங்கி சேவையானது இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதன் தொடக்க விழா மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் உடனிருந்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் பெரியகருப்பன், கே.ஆர். ராமசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 
    அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

    கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×