search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்பார்க்ளர் எனப்படும் கம்பி மத்தாப்பு உற்பத்தி ஆலைகள் 100 இயங்கி வருகின்றன. கம்பி மத்தாப்பு எலக்ட்ரிக், கலர், கிரீன், ரெட் என 4 விதமான மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றது.

    இதில் ரெட் தவிர மற்ற மூன்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்திதான் தயாரிக்க முடியும். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

    கம்பி மத்தாப்பு ஆலைகளில் ரெட் எனப்படும் மத்தாப்பு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் என்ற சிவப்பு உப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் பேரியம் நைட்ரேட் கலந்து இருப்பதாக கூறி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கம்பி மத்தாப்பு ஆலைகளில் ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்தனர் .

    இதனால் விரக்தி அடைந்த கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2-ந்தேதி முதல் ஆலைகளை மூடினர். 45 நாட்களுக்கு மேலாகியும் கம்பி மத்தாப்பு ஆலைகள் இயங்கவில்லை. இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது . கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என எந்த இடத்திலும் கூறவில்லை.

    சிவப்பு உப்பை பயன்படுத்தி ஒரு வகை மத்தாப்பு மட்டும் தயாரித்தாலும், பெசோ அதிகாரிகள் ஆலையின் உரிமைத்தை ரத்து செய்கின்றனர். இந்தியாவில் 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் கம்பி மத்தாப்பு உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது .

    ஆனால் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கெடுபிடி இல்லாமல் கம்பி மத்தாப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    இதனால் சிவகாசி பட்டாசு வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கம்பி மத்தாப்புக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    ×