search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "january 22"

    • கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • பல வட இந்திய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி நிறுத்தப்பட்டது

    தங்களுடன் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகங்களில் இருந்து, அவர்களுக்கு விருப்பமான உணவை, அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கும் சேவையை அளிப்பது இணையதள வழியாக இயங்கும் இந்திய நிறுவனம், சொமேட்டோ (Zomato).

    நேற்று, உத்தர பிரதேச மாநில அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    வட இந்தியாவின் பல மாநிலங்களில் நேற்று, வாடிக்கையாளர்களுக்கு சொமேட்டோவில் அசைவ உணவு வழங்கப்படவில்லை.


    இது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.

    "உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசாங்க உத்தரவிற்கு ஏற்ப அசைவ உணவு வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது" என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது.

    ஜனவரி 22 அன்று, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள் சைவ உணவை மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாக தேசிய உணவக சங்கத்தின் உத்தர பிரதேச தலைவரான வருண் கேரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    அம்மாநிலத்தில் அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

    வரும் 22-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் என ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர். #JactoGeo #Protest
    மதுரை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

    இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ இன்று திரும்பப் பெற்றது.

    இதுதொடர்பாக அந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 22ம் தேதி எங்களது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என தெரிவித்துள்ளது.

    ஜாக்டோ-ஜியோ, அரசுத்தரப்பு வாதத்தை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட் கிளை இந்த வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. #JactoGeo #Protest
    ×