search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL"

    • 1198 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.
    • 1999 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 600GB டேட்டா.

    அரசு செல்போன் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி வழங்க தயாராகி வருகிறது. நாட்டின் முக்கிய இடங்களில் 4ஜி சேவை வழங்கி வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மலிவான விலையில் வருடாந்திர பிளானை அறிவித்துள்ளது.

    1198 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி

    300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.

    மாதந்தோறும் 30 இலவச எஸ்எம்எஸ்.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    365 நாட்களுக்கு 600GB டேட்டா.

    தினந்தோறும் 100 எஸ்எம்ஸ் இலவசம்.

    2999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    ஒரு நாளைக்கு 3GB டேட்டா உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    தினசரி 10 எஸ்எம்எஸ் இலவசம்.

    • பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
    • ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும்.

    மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன்-ஐடியா) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேர பிஎஸ்என்எல் தயாராக உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.

    பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும்.

    இத்துடன் நிறுவனத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைக் குறிப்பிடுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கிறது. ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் இசை போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    PV2399: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,399. இது 395 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

    PV1999: இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 600ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி குரல் அழைப்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்

    PV997: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.997 மற்றும் 160 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

    STV599: இது பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

    STV347: இந்த திட்டத்தின் விலை ரூ. 347 மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் 54 நாட்கள் செல்லுபடியாகும்.

    PV199: இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    PV153: இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 26ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

    STV118: இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 10 ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது.

    • பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.

    அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:

    புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.

    இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.

    ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.

    இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது.
    • அடுத்த மாதம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

    தனியார் செல்போன் நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. 4ஜி சேவையையே வழங்கி நீண்ட நாள் ஆகி விட்டது.

    நிதிப்பற்றாக்குறை, ஆள்பற்றாகுறை உள்பட பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழகத்தில் தரம் உயர்த்து வதை தாமதப்படுத்தியதாக வும் தற்போது 4ஜி அலை வரிசையை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் அடுத்த மாதம் (ஜூன்) சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

    மின்வெட்டு காரணமாக தடை ஏற்பட்டதாகவும் நெட்வொர்க்கை சீரமைக்க கணினியை மறுதொடக்கம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று பிற்பகலுக்குள் நிலைமை சீரடையும் என் றும் தெரிவித்தனர்.

    • சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
    • மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 91 மற்றும் ரூ. 288 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படவில்லை.

    இரண்டு சலுகைகளும் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. எனினும், இவை சென்னை வட்டாரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கிறது. அந்த வகையில், இந்த சலுகைகள் மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 91 சலுகையில் 600 எம்.பி. டேட்டா, 700 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில், பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையை கொண்டு இந்த சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 288 சலுகையில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகை தினமும் அதிகளவு டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற ஒன்று ஆகும்.

    • ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    * நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டன.

    * ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    • வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
    • செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.

    சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

     


    இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
    • அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

     


    அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. 

    • இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
    • இரு தரப்பினருக்கும் தைரியம் வரவழைக்கும் முயற்சி என மேலாளர் கூறினார்

    மலைமாநிலம் எனப்படும் வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் மழை, வெயில், பனி என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் மலைச்சரிவுகளால் பயணம் தடைபடாத வகையில் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.

    அந்த சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திர கோளாறினால் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) ஒரு குழாய் வழியாக அந்த சுரங்கத்திற்குள் ஒரு தரைவழி தொலைபேசி சாதனத்தை (landline instrument) அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அதற்கு வேண்டிய தொலைத்தொடர்பு லைன்களை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "இந்த சாதனத்தின் மூலம் சிக்கி கொண்டுள்ள பணியாளர்கள், வெளியே கவலையுடன் உள்ள அவர்களின் குடும்பத்தினருடன் பேசி கொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கும்" என அம்மாவட்ட பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் (DGM) ராகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

    பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி துரிதப்படுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

     

    பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    • பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.
    • இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பால. சந்திரசேனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய பி.எஸ்.என்.எல். இணையதளத்தின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்படவுள்ளது.

    இந்த மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி மற்றும் 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள் மற்றும் பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.

    பி.எஸ். என்.எல் பைபர் இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் வெகுவிரைவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் முழு அளவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
    • பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜிபிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.

    அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் இந்த 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக நெல்லை மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது.

    தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நவீன 4ஜி உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்குகிறது.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஆய்வுப் பிரிவான சென்டர் பார் டிப்பார்ட்மென்ட் ஆப் டெலிமேடிக்ஸ் மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 309 டவர்களும், 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்து டவர்களும 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு எளிதாக மாற்ற கூடவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படுத்தப்படுகிறது. மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். நெல்லை சமீபத்திய காலங்களில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து வருகிறது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்ட நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும் சேவையின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்க தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பி.எஸ்.என்.எல்.ன் இந்த மேம்பட்ட 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறம் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×