அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்

2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்
Published on

இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த காலாண்டில் நிகர லாபம் ஈட்டியதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டு ஜனவரி- மார்ச் காலாண்டில் (4ஆவது) 849 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2024-2025 நிதியாண்டியன் 4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அப்போது கடந்த 18 ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக லாபம் ஈட்டியிருந்தது. அதன்பின் தற்போது அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com