என் மலர்
இந்தியா

அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்
- 2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.
- 4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த காலாண்டில் நிகர லாபம் ஈட்டியதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டு ஜனவரி- மார்ச் காலாண்டில் (4ஆவது) 849 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2024-2025 நிதியாண்டியன் 4ஆவது காலாண்டில் 280 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
2024-2025 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அப்போது கடந்த 18 ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக லாபம் ஈட்டியிருந்தது. அதன்பின் தற்போது அடுத்தடுத்து காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.
Next Story






