search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4G"

    • தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
    • பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜிபிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.

    அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் இந்த 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக நெல்லை மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது.

    தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நவீன 4ஜி உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்குகிறது.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஆய்வுப் பிரிவான சென்டர் பார் டிப்பார்ட்மென்ட் ஆப் டெலிமேடிக்ஸ் மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.

    உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 309 டவர்களும், 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்து டவர்களும 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு எளிதாக மாற்ற கூடவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படுத்தப்படுகிறது. மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். நெல்லை சமீபத்திய காலங்களில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து வருகிறது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்ட நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும் சேவையின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்க தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பி.எஸ்.என்.எல்.ன் இந்த மேம்பட்ட 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறம் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வேகமாக வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் 5ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட துவங்கின. இரு நிறுவனங்களும் 5ஜி வெளியீட்டில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    எனினும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்களை வெளியாகின. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலேயே பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என தெரிகிறது.

    தற்போதைய நிதியாண்டின் இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு நடைபெற மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து டெல்டிங்கை நடத்தி முடித்தது.

    பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு சார்பில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மெட்ரோ பகுதிகளில் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஎன்எல் நிறுவனம் தற்போதைய இணைப்புகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 4ஜி வெளியீடு தாமதமாகி இருப்பதை அடுத்து பிஎஸ்என்எல் 5ஜி சேவை வெளியீடு மேலும் தாமதமாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • மத்திய அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவில் எப்போது 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பிஎஸ்என்எல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

    பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருகிறது.

    எனினும், 4ஜி வெளியீட்டில் பிஎஸ்என்எல் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், எப்போது 4ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டர் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் இந்தியா-வை ட்விட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, "சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்து இருக்கிறது. 

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. #RelianceJio



    இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. 

    அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது. 



    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது. 

    வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
    இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G



    ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

    இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

    4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.




    தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

    இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #RelianceJio
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் 4ஜி டவுன்லோடு வழங்கியிருக்கிறது. 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்குகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 2019 இல் 9.4Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியா நிறுவனம் 5.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. டிராயின் மைஸ்பீடு தளத்தில் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. 


    ஜனவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டேட்டா வேகம் 18.8Mbps ஆக இருந்தது. அதிவேக டேட்டா வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்து வருவதை போன்று ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜனவரி 2019 இல் ஏர்டெலின் டேட்டா வேகம் 9.5Mbps ஆக இருந்தது. 

    வோடபோன் நிறுவனம் பிப்ரவரியில் 6.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருந்தது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்துவிட்டதால், டிராய் தனது வேகப்பட்டியிலில் இருநிறுவனங்களை தனித்தனியாகவே பட்டியலிடுகிறது.

    ஐடியா நிறுவனம் 5.5Mbps வேகத்தில் 4ஜி சேவை வழங்கியிருக்கிறது. வோடபோன் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 6.0Mbps வேகத்தில் டேட்டா வழங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் வோடபோன் 5.4Mbps வேகத்தில் டேட்டா வழங்கியது. 
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

     

    இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது. 



    இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

    இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. 



    "இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

    இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL



    இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. 

    “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.

    இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
    ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதை பெற என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.




    ஐடியா செல்லுலார் நிறுவனம் கடந்த மாதம் ஆறு வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது பின் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது. இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் தற்சமயம் ஐடியா வோல்ட்இ சேவைகள் வழங்கப்படுகிறது. 

    இந்நிலையில் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் வோல்ட்இ சேவைகளை மேற்கொள்வோருக்கு 10 ஜிபி டேட்டாவும், நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், அதிவேக கால் செட்டப் நேரம், 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் வோல்ட்இ சேவையில் அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான கட்டணம் பயனர் தேர்வு செய்திருக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.

    இத்துடன் 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் கிடைக்காத இடத்தில் பயனர்கள் தானாக 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும். தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஐடியா வோல்ட்இ வழங்கப்படும் நிலையில் விரைவில் பல்வேறு நிறுவன சாதனங்களில் வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது.

    ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ அம்சம் தானாக ஆக்டிவேட் செய்யப்படும் நிலையில், இவ்வாறு ஆக்டிவேட் ஆகாத பட்சத்தில் பயனர்கள் ‘ACT VOLTE’ என டைப் செய்து 12345 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வோல்ட்இ சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஐடியா 4ஜி சிம் கார்டை ஸ்மார்ட்போனின் சிம் ஸ்லாட் 1-இல் போட வேண்டும்.
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவைகளை விரைவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் போட்டியை கருத்தில் கொண்டு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெற்றிகரமாக துவங்குவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிகமுக்கிய கட்டமாகும்.

    இந்த திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய 4ஜி சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.20 என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கும் என வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும். 

    பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

    முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது. 

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    ×