search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை துவக்கம்
    X

    விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை துவக்கம்

    பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL



    இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. 

    “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.

    இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×