என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவையை துவங்கும் பிஎஸ்என்எல்
Byமாலை மலர்20 May 2018 8:43 AM GMT (Updated: 20 May 2018 8:43 AM GMT)
இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவைகளை விரைவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் போட்டியை கருத்தில் கொண்டு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெற்றிகரமாக துவங்குவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிகமுக்கிய கட்டமாகும்.
இந்த திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய 4ஜி சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.20 என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கும் என வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பு படம்
பிஎஸ்என்எல் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும்.
பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.
முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது.
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X