search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opensignal"

    இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G



    ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

    இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

    4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.




    தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

    இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

     

    இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது. 



    இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

    இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. 



    "இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

    இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கிய நிறுவனம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் டேட்டா வேகம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் மற்றும் அதிவேக டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களின் சுவாரஸ்ய தகவல்களை ஓபன்சிக்னல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த டவுன்லோடு வேகம், குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகம், 3ஜி வேகம், வெவ்வேறு நெட்வொர்க்களில் சிக்னல் பரப்பளவு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    கடந்த மூன்று மாதங்களில் நிறுவனங்கள் வழங்கிய சேவைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஏர்டெல், ஐடியா, ஜியோ மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த டேட்டா வேகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன்படி செப்டம்பர் 2017 முதல் டவுன்லோடு வேகங்கள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதோடு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சேவை சீராக இருந்ததாக ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் எல்டிஇ நெட்வொர்க் பரப்பளவை அதிகரித்து வருகின்றன, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் டேட்டா வேகம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளர்கள் வேகமான எல்டிஇ வசதியை பயன்படுத்த முடிந்தது.

    மே 2017 - பிப்ரவரி 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அதிகபட்சம் 1MBPS வரை தங்களது டேட்டா வேகத்தை அதிகரித்து இருக்கின்றன. இது ஒட்டுமொத்த டேட்டா வேகம் டிசம்பர் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஜியோ இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை பயனர்களால் முன்பை விட 96% வரை சீரான எல்டிஇ சிக்னல்களை பெற முடிந்தது. எனினும் ஜியோவின் 4ஜி வேகம் டேட்டா கொள்ளளவு பிரச்சனைகளால் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜியோ டேட்டா வேகம் அதிகரித்து, முதலிடத்தில் இருந்தது.

    வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவு டேட்டா பயன்படுத்த துவங்கியிருப்பதால் ஜியோவின் ஒட்டுமொத்த டேட்டா வேகம் குறைய ஆரம்பித்துள்ளது. டேட்டா வேகம் தொடர்ந்து குறைந்ததால் ஜியோ டேட்டா வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
    ×