search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Data"

    ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.



    ஆன்லைனில் சுமார் 27.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததால் அவற்றை ஹேக்கர்கள் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இந்திய குடிமக்களின் மாங்கோ டி.பி. (MongoDB) டேட்டாபேஸ் அமேசான் AWS ஷோடன் சர்வெர்களில் பொதுப்படையாக இயக்கக்கூடிய வகையில் இருந்ததாக பாப் டியாசென்கோ எனும் பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்தார்.

    பொதுப்படையில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட மாங்கோ டி.பி. டேட்டாபேசில் சுமார் 27,52,65,298 பேரின் தனிப்பட்ட விவரங்களுடன் மே 1 ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பாதுகாக்கப்படாமல் இருந்தது என பாப் தெரிவித்திருக்கிறார். 



    இந்த விவரங்களில் பயனரின் பெயர், மின்னஞ்சல், பாலினம், கல்வி விவரம், பணி விவரங்கள், மொபைல் போன் நம்பர், வேலை செய்யும் இடம், பிறந்த தேதி, வருமானம் உள்ளிட்டவை ஷோடனில் இயக்கக்கூடிய வகையில் கிடந்திருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி முதன்முதலில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட விவரங்களில் அதிகளவு கேச்சி இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்ததும் பாப், இந்திய செர்ட் குழுவினருக்கு மே 1 ஆம் தேதி தகவல் வழங்கி இருக்கிறார். இது மே 8 ஆம் தேதி வரை அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பின் யுனிஸ்டெலார் எனும் ஹேக்கர்கள் குழு பயனர் விவரங்களை அபகரித்துக் கொண்டு கோடெட் குறுஞ்செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றது.

    வெளிப்படையாக கிடைத்த விவரங்களை விட குறைந்தளவு விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கலாம் என்ற போதும், இந்திய பகுதியில் இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என பாப் தெரிவித்தார். முன்னதாக முறையற்ற ஆத்தென்டிகேஷன் மூலம் மாங்கோ டி.பி. சர்வெர்களில் மால்வேர் மற்றும் ரான்சம்வேர் போன்றவை இன்ஸ்டால் ஆகியிருக்கின்றன என அவர் தெரிவித்திருந்தார்.
    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு சுமார் 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #MobileData



    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா கிடைப்பதும், ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வீடியோ ஆன் டிமாண்ட் சந்தை அதிக பலனடையும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் இணைய பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அசோகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் டேட்டா பயன்பாடு 10,96,85,793 மில்லியன் எம்.பி.யாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2017 இல் டேட்டா பயன்பாட்டு அளவு 71,67,103 மில்லியன் எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    2013 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் மொபைல் டேட்டாவை தவிர வாய்ஸ் சேவைகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் பெரும்பாலான மொபைல் கட்டணங்களில் டேட்டா பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 65 முதல் 75 சதவிகிதம் வீடியோ ஸ்டிரீமிங் செய்யப்படுவதாக நோக்கியா மொபைல் பிராண்ட்பேண்ட் இன்டெக்ஸ் 2018 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு மொபைல் இண்டர்நெட் பயன்பாடு 56.7 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இல் இந்த வளர்ச்சி 30.2 சதவிகிதமாக இருந்தது. 
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

     

    இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது. 



    இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

    இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. 



    "இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

    இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
    உலகில் 5ஜி சேவை வழங்கப்படும் வேளையில், இந்தியாவிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய பி.எஸ்.என்.எல். பணியாற்றி வருகிறது.




    உலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. 

    இதற்கென நோக்கியா, இசட்.டி.இ மற்றும் கொரியன்ட் போன்ற நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். இணைகிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 5ஜி சேவைகளை துவங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5ஜி வெளியாகும் போதே இந்தியாவிலும் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவைகள் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் தெரிவித்தார்.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தபால் முலம் கட்டணத்திற்கான பில்கள் அனுப்பப்படுகிறது. சென்னையில் 5.5 லட்சம் தரைவழி டெலிபோன்களும், 3.5 லட்சம் போஸ்ட்பெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாத கட்டண விவரத்தை தபால் வழியாக அனுப்புவதை பி.எஸ்.என்.எல். நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் ‘பில்’ விபரத்தை இ.மெயில் வழியாக, இ-பில்லாக அனுப்ப திட்டமிட்டு ‘கோ கிரீன்’ என்ற புதிய முறையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.


    கோப்பு படம்

    இது பற்றி பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் விஜயா கூறியதாவது:-

    இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ‘‘கோகிரீன்’’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேப்பர் பில்லுக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரிக்கு ‘பில்’ அனுப்பப்படும்.

    அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை பின்பற்றுவோருக்கு ‘பில்’ தொகையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். இதுவரையில் 40 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே இ.பில் வழங்கப்படும். இல்லையெனில் தபால் மூலமே வழக்கம் போல் வினியோகிக்கப்படும். போஸ்ட்பெய்டு பில் தாரர்களுக்கு எம்.எம்.எஸ். மூலமாக பில் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறோம்.

    செலவை குறைப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது செயல்படுத்தப்படுகிறது என்றார்.
    ×