search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amazon"

    • கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    குவால்காம் ஸ்னப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990-க்கும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராஸர், அட்ரினோ GPU, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர்ஷேர், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்கலாம்.
    • எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 மாடலின் பேஸ் வேரியன்டில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஐபோன் 13 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51 ஆயிரத்து 790 என மாறி இருக்கிறது. இதன் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்கார்டு கிரெடிட் கார்டு மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ட்ரூ டோன், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி, ஐ.ஒ.எஸ். 17 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5, என்.எஃப்.சி. மற்றும் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மின்சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு.

    அமேசான் கிரேட் ரிபப்லிக் சேல் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என மின்சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இது அதன் உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு ஆகும்.

     


    இந்த சலுகை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. மேலும் இது, கேலக்ஸி S23 அல்ட்ரா பேஸ் வேரியண்டிற்கும் பொருந்தும். இதுதவிர கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடலுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

    • உலகளவில் மக்களிடம் "வாங்கும் சக்தி" குறைந்து விட்டது
    • கடந்த ஆண்டே கூகுள் மற்றும் அமேசான் பல ஊழியர்களை நீக்கின

    கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

    உலகளவில் பெரும்பான்மையான மக்களிடம் "வாங்கும் சக்தி" (purchase power) குறைந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளது. நிறுவனங்களின் விற்பனையில் தேக்க நிலையையும், வீழ்ச்சியும் அதிகரித்து வருகின்றன.

    2022 மார்ச்சில் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் மற்றும் 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் நீடிக்கும் சிக்கல், சீனாவில் சரிய தொடங்கியுள்ள உள்நாட்டு பொருளாதாரம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    கடந்த வருடம் முதல் இதன் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியதால், உலகின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பை தொடங்கின.

    "லே ஆஃப்" (layoffs) அல்லது ஜாப் கட்ஸ் (job cuts) என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டே அமேசான், மைக்ரோசாப்ட், காக்னிசன்ட் மற்றும் கூகுள் உட்பட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

    தற்போது அடுத்த சுற்றில் மேலும் பல ஊழியர்களை அமேசான் மற்றும் கூகுள் நீக்கியுள்ளது.

    அமேசான், முன்னரே ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் யூனிட்டில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது ப்ரைம் வீடியோஸ் (Prime Videos) மற்றும் எம்ஜிஎம் ஸ்டூடியோ (MGM Studios) கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை நீக்கியது.

    கூகுள், செலவினங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி), மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றியவர்களை நீக்கியது.

    பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    • ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்குகிறது.

    அமேசான் வலைதளத்தில் கிரேட் ரிபப்ளிக் டே சேல் (Great Republic Day Sale) சிறப்பு விற்பனை ஜனவரி 13-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குடியரசு தினத்திற்கு முன்பு துவங்கும் சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு மட்டும் முன்கூட்டியே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.

    கிரேட் ரிபப்ளிக் டே சேலில் பயனர்கள் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த பலன்களை பெற முடியும். அமேசானுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்படும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    சிறப்பு விற்பனை குறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில், அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு இந்த விற்பனை 12 மணி நேரம் முன்னதாகவே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பொருட்களை ஒன்று அல்லது இரண்டே நாட்களில் டெலிவரி பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

    எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து அமேசான் இதுவரை முழு தகவல்களை வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். பொருட்கள் மட்டுமின்றி அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படலாம்.

    தற்போதைய தகவல்களின் படி அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களை வாங்கும் போது அதிகபட்சம் 75 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. 

    • 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
    • திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்

    2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).

    2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.

    இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.

    2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.

    2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

    பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.

    புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்று இருக்கிறது.
    • முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12C மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் டிசம்பர் 6-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ரெட்மி 13C அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் மைக்ரோசைட்டில் ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.

    அதன்படி ரெட்மி 13C ஸ்மார்ட்போனுடன் அதன் 5ஜி வெர்ஷனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 5ஜி கனெக்விட்டியுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று தெரிகிறது.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C மாடல் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார் ஷைன் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. வசதி கொண்ட 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் தோற்றம் நைஜீரிய மாடலை போன்ற காட்சியளிக்கிறது. அமேசான் தவிர Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம்.

     

    ரெட்மி 13C அம்சங்கள்:

    6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

    மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    மாலி G52 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 14

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    4ஜி, டூயல் சிம் ஸ்லாட், வைபை

    ப்ளூடூத் 5.3

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
    • மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:

    13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்

    M1 சிப்செட்

    8 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    டச் ஐடி சென்சார்

    வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    15 மணி நேர பேக்கப்

    30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்

    • புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும்.

    ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி இந்திய சந்தையில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன் இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஐகூ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ போஸ்டரில் தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்காக ஐகூ நிறுவனம் பி.எம்.டபிள்யூ. M மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

     

    கூட்டணியின் அங்கமாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்கள் அடங்கிய ஸ்டிரைப் டிசைனில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பாக ஐகூ 12 மற்றும் ஐகூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் OLED பேனல், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், ஆப்டிக்கல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் ஒரிஜின் ஒ.எஸ். 4, இந்திய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜி.பி. வரையிலான ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 64MP லென்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி.
    • மேக்புக் ஏர் மாடலை வாங்குவோருக்கு வங்கி சார்ந்த சலுகையும் அறிவிப்பு.

    அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் துவங்கும் முன்பே, ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை அமேசான் வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் M1 விலை அதன் முந்தைய விலையை விட 30 சதவீதம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மாடல் ரூ. 69 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மையான விலையில் இருந்து 30 சதவீதம் குறைவு ஆகும். இத்துடன் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

     

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 2 டி.பி. வரை எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் மேக் ஒ.எஸ். வென்ச்சுரா மூலம் இயங்குகிறது.

    இத்துடன் 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, டச் ஐ.டி. சென்சார், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 49.9 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.0, 2x யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

    ×