என் மலர்
நீங்கள் தேடியது "அமேசான்"
- 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
கடந்த மாதம் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்த மிகப்பெரிய பணிநீக்கங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
நிறுவனம் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது மென்பொருள் பொறியாளர்கள்தான் என்று தெரிவித்துள்ளது.
அதாவது, 14,000பேரில் 10 இல் 4 பேர் (சுமார் 1800 க்கும் அதிகமான) பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டனர்.
பொறியாளர்களைத் தவிர, கேமிங், விளம்பரங்கள் மற்றும் பரிசோதனைத் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் பொருளாதாரம் அல்லது செயற்கை நுண்ணறிவு அல்ல என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.
இது நிறுவனத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மாற்றம் என்று அவர் தெரிவித்தார். நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ஆக மாற்றுவது, தேவையற்ற துறைகளைக் குறைப்பது மற்றும் வேகமாக வேலை செய்வது எங்கள் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்க அமேசான் நிறுவனம் முடிவு
- 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது.
- இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார்.
நேற்று முன் தினம், உலக அளவில் அமேசான் வெப் சர்விசஸ் (AWS) சர்வர் தொழில்நுட்பம் பாதிப்புக்குள்ளானது.
இதனால் AWSஐ சார்ந்து இயங்கும் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்களும் இதனால் பாதிக்கப்பட்டன. சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது. அதிக வெப்பத்தில் தூங்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சில பயனாளர்கள் பதிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார். எதிர்காலத்தில் ஆஃப்லைனிலும் கட்டில்கள் இயங்கும் வண்ணம் உருவாக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ. 1,09,900க்கு வெளியிடப்பட்ட 512 ஜிபி விருப்பம் ரூ. 99,999க்கு விற்பனைக்கு வருகிறது.
- குறைக்கப்பட்ட விலைகளுடன், ஐபோன் வாங்குபவர்கள் கூடுதல் வங்கி தள்ளுபடி, எக்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம்.
இந்தியாவில் ஐபோன் 16 பேஸ் வேரியண்ட் 128 ஜிபி மாடல் இந்திய சந்தையில் ரூ. 79,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளிப்கார்ட் தளத்தின் தற்போதைய "GOAT SALE 2025"-ல் இப்போது ரூ. 69,999 விலையில் வாங்கலாம்.
அமேசான் வலைதளத்திலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
தள்ளுபடி விவரங்கள்:
ஐபோன் 16 இன் 128 ஜிபி விலை தற்போது பிளிப்கார்ட்டில் ரூ. 69,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது . இது ரூ. 79,900 வெளியீட்டு விலையை விட ரூ. 9,901 குறைவாகும். ரூ. 89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 256 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ. 81,999க்கு கிடைக்கிறது. மேலும் ரூ. 1,09,900க்கு வெளியிடப்பட்ட 512 ஜிபி விருப்பம் ரூ. 99,999க்கு விற்பனைக்கு வருகிறது.
தள்ளுபடி மட்டுமின்றி ஐபோனின் விலையை மேலும் குறைக்க வாடிக்கையாளர்கள் ரூ. 3,000 மதிப்புள்ள கூடுதல் வங்கிச் சலுகைகளைப் பெறலாம்.
இதற்கிடையில், அமேசான் தளத்தில், ஐபோன் 16 தற்போது ரூ. 73,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் அறிமுக விலையை விட ரூ. 6,400 குறைவு ஆகும். 256 ஜிபி மற்றும் 512 ஜிபி பதிப்புகள் முறையே ரூ. 83,500 மற்றும் ரூ. 99,900 விலையில் கிடைக்கின்றன. குறைக்கப்பட்ட விலைகளுடன், ஐபோன் வாங்குபவர்கள் கூடுதல் வங்கி தள்ளுபடி, எக்சேஞ்ச் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம்.
ஐபோன் 16 அம்சங்கள்:
ஐபோன் 16 மாடல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே, 2,000 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பை கொண்டுள்ளது. இது A18 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் iOS 18 உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை, இது 48MP பிரைமரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 12MP TrueDepth சென்சாரைப் பெறுகிறது.
இந்த ஐபோன் மாடலில் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி LTE, வைபை 6E, ப்ளூடூத், GPS, NFC மற்றும் யுஎஸ்பி டைப்-சி கொண்டிருக்கிறது.
- The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
- ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.
தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.
கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் சூப்பர் ரிச்சாக 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்றது. திருமண செலவு ரூ.430 கோடி என்று கூறப்படுகிறது.
The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
- 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ரூ. 59,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Fan Edition ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கேலக்ஸி S24 FE இன் 128 ஜிபி மாடல் தற்போது ரூ. 40,000 க்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா மாத தவணை முறை வசதிகள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2400e சிப்செட் மற்றும் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S24 FE சலுகை விவரங்கள்
அமேசான் நிறுவனம் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,655-க்கு பட்டியலிட்டுள்ளது. இதே போன்று 256 ஜிபி மெமரி மாடல் ரூ.65,999க்கு பதிலாக ரூ.43,300க்கு கிடைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறை பரிவர்த்தனை மூலம் வாங்குவோருக்கு ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 34,405 ஆகக் குறைக்கும்.
இத்துடன் மாதத்திற்கு ரூ. 1,729 இல் தொடங்கி ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
இதற்கிடையில், சாம்சங் இந்தியாவின் வலைத்தளம் தற்போது கேலக்ஸி S24 FE இன் பேஸ் வேரியண்ட்டை ரூ. 59,999க்கு விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் தளத்தில், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S24 FE அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி S24 FE மாடலில் 6.7-இன்ச் Full-HD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி S24 FE மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP பிரைமரி கேமரா, OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது. இத்துடன் 10MP செல்பி கேமரா கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68-சான்று பெற்றிருக்கிறது. இது 25W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
- இதுவரை அமேசான் பிரைமில் சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம்.
- AD-FREE ஆக வீடியோக்களைக் காண கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 சந்தா செலுத்த வேண்டும்
அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் ஓடிடிதளத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜூன் 17ம் தேதி முதல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுவரை மாத சந்தா அல்லது வருட சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் தற்போது AD-FREE ஆக வீடியோக்களைக் காண தற்போதைய சந்தாவுடன் சேர்த்து கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 அல்லது மாதம் ரூ. 129 செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் அமேசான் பிரைம் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
- இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.
ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
- கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.
அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.
இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.
இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.
- ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்.
- முன்னதாக ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் வரும் நாட்களில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அதிரடியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. நிர்வாக சீரமைப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட காரணங்களை சொல்லி இந்த நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பணிநீக்க நடவடிக்கை இந்த வாரத்தில் இருந்தே துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேர் என்பது மூன்று சதவீதம் தான் என கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அமேசான் சாதனங்கள், அலெக்சா, சில்லறை பிரிவு மற்றும் மனிதவளங்கள் துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
அமேசானில் பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல் வெளியாகும் முன்பு தான் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது வாழ்நாள் முடிவதற்குள் ரூ. 10 லட்சத்து 04 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான தொகையை நன்கொடையாக வழங்க விரும்புவதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
- பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும்.
- அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
புதுடெல்லி:
சமூக வலைதளமான டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார்.
இதனை தொடர்ந்து முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதமாகும்.
இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. அந்த நிறுவனமும் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும்.
அமேசான் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அதை உறுதிப்படுத்தியது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- தற்போது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஐபோன் 14 (128ஜிபி) மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், அமேசான் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 78 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 73 ஆயிரத்து 400 என குறைந்து விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 16 ஆயிரத்து 300 வரை தள்ளுபடி பெறலாம். எனினும், இதற்கு பழைய போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெறும் படச்த்தில் ஐபோன் 14 (128ஜிபி) விலை ரூ. 57 ஆயிரத்து 100 என மாறி விடும்.

ஐபோன் 14 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.






