search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    தஞ்சையில், 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.

    இதனை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் நாளை (திங்கள் கிழமை ) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

    பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×