search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்
    X

    தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்

    • சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
    • காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

    இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×